பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Monday, April 16, 2007

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'



பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகக் கருத்திலும் களத்திலும் போராடுவோம் !

இசுலாமிய-கிறித்தவ மக்களை எதிரிகளாகச் சித்திரித்து ஆர்.எஸ்.எஸ்.கும்பல் நடத்தும் மதக்கலவரங்களுக்கு அவதூறுக்ளே மூலப் பொருளாக விளங்குகின்றன. வாழ்க்கை , பண்பாடு, கல்வி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், பொழுதுபோக்கு, மொழி என அனைதுக் துறைகளிலும் சிறுபான்மை மத மக்களை வெறுக்கும் அண்ணம் இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முசுலீம்கள் மீதான துவேசம் என்பதைச் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்- இன் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தோடும் காங்கிரசு - போலிக் கம்யூனிஸ்டுகள் - திராவிடக் கட்சிகள் தமிழன ஆர்வலர்கள் ஆகிய சகல பிரிவினடும் வெவ்வேறு அளவில் ஒன்றுபடுகின்றனர். இதுவே இந்து மதவெறியர்களின் பலமாக இருக்கிறது. இத்தகைய அவதூறுகளை பெரும்பான்மை மக்களின் கருத்தாக இயல்பாக மாற்ற முடிகிறது.


'புரட்சி கலைஞர்' விஜயகாந்த் இந்து முன்னணியின் பிரச்சாரத்தையே வசனமாகப் பேசுவதும், விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவளரான பழ.நெடுமாறனும் சிவசேனா பால் தாக்கரேயோடு உறவாடுவதும், இப்போது பழ.நெடுமாரனுடன் இணைந்திருக்கும் சுப.வீரபாண்டியன் 'அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதிய கண்ணதாசனையும் 'நம்மாளு' என்று போற்றுவதும், கருணாநிதியும் - ஜெயலலிதாவும் போட்டிக் கொண்டு இந்து முன்னணி இராம.கோபாலனைத்தாஜா செய்வதும் , வேத காலத்தையும் விவேகானந்தரையும் போற்றும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும், கம்பராமயணமே எனக்குப் பிடித்த நூலென்று புல்லரிக்கும் நல்லகண்ணுவும், பா.ஜ.க.வின் அக்கிரகாரத்திற்க்குள் இருந்து கொண்டே சேரி விடுதலை பேசும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் - தலித் பத்திரிகையும், பா.ஜ.க அரசுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும் 'புரட்சி புயக்' வை.கோவும், வாஜ்பாயி மந்திரி பதவி கொடுத்தால் பூணுல் போடவும் தயாராக இருக்கும் பா.ம.க.ராமதாசும்-இப்படிப் பார்ப்பன இந்து மதத்தின் அரசியலையும் பண்பாட்டையும் , நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிப்போர் பலர் இருக்கின்றனர்.


பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூடத் தீவிர ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தவர்கள் இப்போது இவ்வாறு மாறியிருப்பதை வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று மட்டும் மதிப்பிடக் கூடாது, தாங்கள் இவ்வாறு இந்துத்துவத்தை அரசியல் ரீதியாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ ஆதரித்தாலும் தங்களது வாங்கு வங்கியும் ஆதரவாளர்களும் தம்மை விடு விலகிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவர்களுகு இருக்கிறது, இந்தத் 'துணிச்சலுக்குக் காரணம் உண்டு. இந்தியப் பண்பாடு , தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் நீக்கமற விரவியிருக்கும் பார்ப்பனீய விழுமியங்களை எதிர்த்த போராட்டத்தினூடாக இவர்கள் தங்களது அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. சாதியம் , இனவாதம் உள்ளிட்ட இந்துத்துவக் க்றை படிந்த பண்பாட்டுடனும் கண்ணோட்டங்களுடனும் நிலவிவரும் சமூக அடித்தளத்தின் மீது ஏறி நின்று ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தார்கள். இப்போது அதே அடித்தளத்தின் மீது ஏறி நின்று பா.ஜ.கா விடன் கை குலுக்குகிறார்கள்.


இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலின் தலைமைச் சக்திகள் எனப்படுவோர் இப்படி இருப்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. வெள்ளையர் காலந்தொட்டே காந்தி, திலகர், பாரதி போன்றோர் இப்படித்தான் இருந்தனர். இத்தகைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எத்தகைய ஆதரவான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அரசியல் துறையே இப்படி இந்துமயமாக மாறியிருக்கும் போது, இலக்கியம், இசை, பத்திரிகைகள் , திரைப்படம், தொலைக்காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே, ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிப் பிரச்சாரம் செய்யும் அவதூறுகள் அவர்களிடமிருந்து மட்டும் தான் கிளப்ப வேண்டும் என்பதில்லை. நீங்கள் எதிர்பாராத ஏதாவது ஒரு திசையிலிருந்தும் அந்த அவதூறுகள் வரும்.


இந்நூலில் இடம்பெற்றுள்ள அவதூறுகளோடு ஆர்.எஸ்.எஸ். இன் பொய்ப் பட்டியல் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. இவற்றுக்கு முடிவேதுமில்லை. காலம், இடம், பிரச்சினை சார்ந்து புதிய பொய்கள், புதிய வடிவில் கொட்டப்படும். ஆயினும் எத்தகைய அவதூறுகளையும் இனங்கண்டு, பரிசீலித்து, ஆய்வு செய்து, உண்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை இந்நூல் உங்களுக்கு அளிக்கும்.


தற்போது பள்ளி கல்வித் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தும் கரசேவையினை இந்து மதவெறியர்கள் பகிரங்கமாக ஆரம்பித்து விட்டனர். இதை எதிர்க்கும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளோ பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கின்றனர். இத்தகைய பாராளுமன்ற பஜனைகள் மூலம் அவர்களை வீழ்த்த முடியாது; வீதியில் இறங்கி மக்களை அரசியல் படுத்தி, அணி திரட்டி இந்து மதவெறியர்களுடன் நேரடிச் சம்ர் புரிவதன் மூலமே வேரறுக்க முடியும். இத்தகைய புரட்சிகர அரசியல் நடைமுறையை 90-ஆம் ஆண்டின் முழுவதும் - திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தமிழ் மக்கள் இசை விழா வரை - பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகின்றன மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும். பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமான தமிழ் மக்கள் இசை விழாவின் ஒன்பதாம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்படுவது அத்தகைய போராட்டங்கள் தொடருவதற்கு வலுச் சேர்க்கும் என்று கருதுகிறோம்.


புதிய கலாச்சாரம் இதழில் 1999 முதல் 2001 வரை வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். "பால் பவுடருக்காக மதம் மாறுவது குற்றமா?" என்ற கட்டுரையும், "கிரிகெட் - பாகிஸ்தானுக்குக் கை தட்டுபவன் பயங்கரவாதியா?" என்ற கட்டுரையும் வேறு சந்தர்ப்பங்களில் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தவை.


அடுத்து வாசகர்களும் தோழர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்றிருக்கிறது. இந்து மதவெறியர்களின் இத்தகைய அவதூறுகளை எங்கெல்லாம் காண்கிறோமோ - திரைப்படம், நாவல் , கவிதை, பத்திரிகை , வானொலி - வானொளி நிகழ்ச்சிகள் - அங்கெல்லாம் அவற்றினை முறியடிக்க வேண்டும். துண்டறிக்கை, சுவரெழுத்து, சுவரெட்டி, கடிதம், நேரடி விவாதம் போன்ற வடிவங்களில் மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல வேண்டும். அவதூறுகளை மூலதனமாக வைத்து இந்து முண்னணி - ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட முறைகளில் தலையிட வேண்டும்.


இத்தகைய போர்க்குணமிக்க - செயலூக்கம் நிறைந்த முயற்சிகளினூடாகத்தான் இந்து மதவெறியின் பிடியிலிருந்து நாட்டையும் - மக்களையும் விடுவிக்க முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்நூல் ஒரு கருத்தியல் ஆயுதமாகப் பயன்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்.


ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.

வெளியீடு
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,அசோக் நகர்,
சென்னை - 600 083.


விலை ரூ 50

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •