பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, April 18, 2007

"அரசு குறித்து - லெனின் " பகுதி III

பண்டத்திலிருந்து, பண்ட மாற்றத்திலிருந்து, பணத்தின் ஆதிக்கம் தோன்றியதிலிருந்து எழுந்தது மூலதனத்தின் ஆதிக்கம், பதினெட்டாம் நூற்றாண்டில் , அல்லது திட்டவட்டமாகக் கூறினால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் உலககெங்கும் புரட்சிகள் நிகழ்ந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலிருந்தும் பண்ணையடிமை முறை அகற்றப்பட்ட்டது. ரசியாவில் எல்லாவற்றுக்கும் கடைசியாக் இது நிகழ்ந்தது.

கி.பி.1861 -இல் ரசியாவில் ஒரு தீவிர மாற்றம் உண்டாயிற்று. இதன் விளைவாக , சமுதாயத்தின் ஒரு வடிவத்துக்குப் பதிலாக அதனிடத்தில் மற்றொரு வடிவம் ஏற்பட்டது. அதாவது , பண்ணையடிமை முறையை அகற்றி விட்டு, முதலாளித்துவம் வந்தது, இதன் கீழ் வர்க்கப் பிரிவினை தொடர்ந்து இருந்து வந்தது. மேலும் பண்ணையடிமையின் பல்வேறு அடையாளங்களும், மிச்சச் சொச்சங்களும் தொடர்ந்து இருந்து வந்தன என்றாலும், வர்க்கப் பிரிவினை அடிப்படையில் ஒரு புதிய வடிவத்தை மேற்கொள்ளலாயிற்று.

எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மூலதனத்திற்கு உடைமையாளர், நிலத்திற்கு உடைமையாளர் , ஆலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் உடைமையாளர் ஆகியோர் மக்கள் தொகையில் மிக மிகச் சிறுபான்மையினராகவே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் எல்லாருடைய உழைப்பும் முழுக்க முழுக்க இவர்கள் வசத்தில் இருக்கிறது, இதன் நேர்விளைவாக , உழைப்பாளி மக்கள் அடைவரின் மீதும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அவர்களை ஒடுக்குகிறார்கள், சுரண்டுகிறார்கள். உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையினர் பாட்டாளிகளாய் , கூலித் தொழிலாளர்களாய் வாழ்பவர்கள்; அதாவது , உற்பத்தி முறையில் தங்களுக்கே உரிய உழைக்கும் கரங்களை, தங்கள் உழைப்புச் சக்தியை விற்க நிர்ப்பந்திக்கப்படுவதால் மட்டும் பிழைப்புக்கு வேண்டியதைப் பெறுகிறார்கள். குடியானவர்கள் பண்ணையடிமைக் காலத்திலேயே ஒற்றுமை கெட்டு , நசுக்கப்பட்டிருந்தார்கள். பண்ணையடிமை முறை போய் முதலாளித்துவம் நிறைபெறத் தொடங்கிய பொழுது, இவர்களில் ஒரு பகுதியினர் (பெரும்பான்மையினர்) பாட்டாளிகளாக மாற்றப்பட்டனர். மற்றொரு பகுதினர் (சிறுபான்மையினர்) செல்வம் படைத்த குடியானவர்களாக, அதாவது தாங்களே தொழிலாளரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வோராய், நாட்டுபுறத்தைச் சேர்ந்த முதலாளித்துவ வர்ககத்தினாராய் மாற்றமடைந்தனர்.

இந்த அடிப்படை உண்மையை -அதாவது , சமுதாயம் அடிமை முறையின் ஆதிகால வடிவங்களிலிருந்து பண்ணையடிமை நிலைக்கும், பிறகு இறுதியாக , முதலாளித்துவத்திற்கு மாறியதை - எப்பொழுதும் நீங்கல் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த அடிப்படை உண்மையை நினைவில் கொள்வதால் மட்டுந்தான் , எல்லா அரசியல் போதனைகளையும் இந்த அடிப்படைத் திட்டத்தில் வைத்துப் பரிசீலிப்பதால் மட்டுந்தான், இந்தப் போதனைகளைச் சரியான வகையில் மதிப்பிட்டு அறியவும், அவை குறிப்பது என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

மனித இனத்தின் வரலாற்றில் , அடிமை முறையும், பண்ணையடிமை முறையும், முதலாளித்துவமுமான இந்தப் பெருங்காலப் பகுதிகளில் ஒவ்வொன்றும் பத்துக்கணக்கான, நூற்றுக்கணக்கான நூற்றாண்டுகளைக் கொண்டது. மற்றும் ஏராளமான பல அரசியல் வடிவங்களை, வெவ்வேறான அரசியல் போதனைகளை , கருத்தோட்டங்களை, புரட்சிகளையெல்லாம் தோன்றச் செய்துள்ளது.

முதலாளித்துவ அறிஞர்கள் , அரசியல்வாதிகளும் ஆனவர்களின் அரசியல், தத்துவஞானம் இன்னும் பிற போதனைகளுடன் சிறப்பாகத் தொடர்புள்ள இந்தப் பெரும் வேறுபாட்டையும், அளப்பரிய வகைப் பாட்டையும் விளக்கிக் கொள்ள ஒரே ஒரு வர்க்க ஆதிக்கத்தின் வடிவங்களில் ஏற்பட்ட மாறுதல் ஆகியவற்றை வழிகாட்டும் சாதன மாகக் கொண்டு பொருளாதாரம் , அரசியல், ஆன்மிகம் , சம்யம் முதலானவை பற்றிய எல்லாச் சமுதாயப் பிரச்சினைகளையும் ஆராயவதே அந்த வழியாகும்.

இந்த அடிப்படை வர்க்கப் பிரிவினை பற்றிய பார்வை நிலையிலிருந்து நீங்கள் அரசு என்பதை ஆராயவீர்கானால், நான் முன்பே சொல்லியபடி, சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிவதற்கு முன்பு, அரசே இருந்ததில்லை என்பதைக் காண்பீர்கள்.ஆயினும், சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை உண்டாகி, உறுதியாக வேரூன்றி விட்டபொழுது வர்க்கச் சமுதாயம் தோன்றிவிட்ட பொழுது, அரசு என்பதும் கூடவே தோன்றி , உறுதியாகவும் வேரூன்றி விட்டது.

அடிமை முறை, பண்ணயடிமை முறை. முதலாளித்துவ முறை ஆகிய கட்டங்களைக் கடந்து சென்ற, இன்னும் சென்று கொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான நாடுகளை மனித இனத்தின் வரலாறு கண்டிருக்கிறது. எத்தனையோ அரசியல் திடீர் மாற்றங்களும் எத்தனையோ புரட்சிகளும் ஏற்பட்டிருந்தாலும் கூட, அரசின் தோற்றத்தை நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள். இவற்றில் ஒவ்வொரு நாட்டிலும், மாபெரும் வரலாற்று மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினுங்கூட, மனித இனத்தின் வளர்ச்சியோடு வழியாக முதலாளித்துவத்திற்கும், முதலளித்தை எதிர்து உலகெங்கும் பரவிய இன்றையப் போராட்டத்திற்கும் சமுதாயம் மாறிச் சென்றிருக்கும் நிகழ்ச்சியுடனும் தொடர்பு கொண்ட சமுதாயத்தினிறும் தனித்துப் பிரிந்த ஒரு குறிப்பான இயந்திரமாக அது எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது; பகுதியாகவோ அல்லது பெரும்பாலும் முழுக்கவோ ஆளுகை செய்வதில் ஈடுபட்டவரான மக்கள் குழுவினையே அது கொண்டிருந்து வந்திருக்கிறது.

மக்கள் , ஆளப்படுவோராகவும் ஆள்வதில் தேர்ந்தவராகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். கடைசியில் கூறப்பட்டவர்கள், சமுதாயத்திற்கு மேல் உயர்ந்து ஆளுவோர், அரசின் பிரதிநிதிகள் என அழைக்கப்படுவோராய் இருக்கிறனர். இந்த இயந்திரம், மற்றவரை ஆள்கின்ற இந்த்க் குழு, கட்டாயப்படுத்துவதற்கான பொருளாயதப் பலம் கொண்ட ஒரு குறிப்பிட்ட கருவிவை எப்பொழுதும் தன்னிடம் கொண்டிருக்கிறது. ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலக் கட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ, அல்லது மத்தியக் காலத்தில் தோன்றிய சுடு கருவிகள் மூலமோ, அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நூணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள, இன்றையத் தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனைகளை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலமோ, இந்த வன்முறை மக்கள் மீது செலுத்தப் படுமின்றது. வன்முறைக்குரிய வழிமுறைகள் மாறின. ஆனால் அரசு நிலவிய பொழுதெல்லாம், ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் ஒரு பகுதியினர் ஆள்வோராய், ஏவல் கொள்வோராய், ஆதிக்கம் புரிவோராய், தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டி, பொருளாயத நிர்ப்பந்தத்திறுகான ஒர் இயந்திரத்தை வன்முறைக்குரிய இயந்திரத்தை அந்தத் காலத்தின் தொழில் நுணுக்கத் தரத்திற்கு ஒத்த ஆயுதங்களைப் பெற்றிருந்தனர்.

இந்தப் பொது நிகழ்ச்சிகளை ஆராய்வதன் மூலம், வர்க்கங்களே இருந்திராத காலத்தில் சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருந்திராத காலத்தில் அரசென்பது இருந்ததில்லையே ஏன்? என்பதையும், வர்க்கங்கள் தோன்றிய பொழுது அதுவும் தோன்றியது ஏன்? எனபதையும் நம்மையே நாம் கேட்டுப் கொள்வதன் மூலம் மட்டுந்தான், அரசின் சாரம் என்ன? அதன் பாத்திரம் என்ன? என்ற கேள்விக்கான ஒரு திட்டமான விடையை நாம் பெறுவோம்.
(அடுத்தடுத்த பதிவுகளில் )

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •