மாப்ளா (Moplah அல்லது Mappilla) என அழைக்கப்படும் முஸ்லிம் சமூகத்தவர் கேரளாவில் வசிக்கும் மக்களாவர். இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய முஸ்லிம் மதத்தவர் இவர்களே ஆவர். எட்டாவது நூற்றாண்டில் சேர நாட்டுடன் அரபு நாட்டு மக்கள் நீண்ட கால வணிக உறவு கொண்டுருந்தார்கள் என்பது வரலறு. அரேபிய மண்ணில் தோன்றியதே இஸ்லாமிய மதம். இஸ்லாமிய மதத்தின் கடைசி இறை தூதரான முகமது நபியின் தலையாய் போதனைகளான "உருவமற்ற இறைவன். இறைவன் ஒருவனே" போன்றவற்றால் கவரப்பட்ட சேரநாட்டு மக்கள், இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். கடல் தாண்டிய வணிக உறவு என்பதன் பின்னணியில் பார்க்கும் போது, கேரளாவின் மேற்குக் கடற்கரைப் பிரதேசமான மலபாரில் இஸ்லாமிய மதம் பரவியதும் அப்பிரதேசத்தின் மக்கள் அம்மதத்தைத் தழுவியதும் இயற்கையாக நடந்தேரிய ஒன்றாகயிருந்தது. இம்மக்களே மாப்ளாக்கள்.
16 மற்றும் 17 ஆம நூற்றாண்டில் மலபார் பிரதேசத்தில் நுழைந்த போர்த்துக்கீசியர்கள் அங்கு தமது ஆட்சியதிகாரத்தை நிலை நிறுத்தப் போராடியதோடு அங்கேயிருந்த இஸ்லாமிய சமூகத்தவரை (மாப்ளா) கிறத்துவத்தைத் தழுவ வற்புறுத்தியபோது மாப்ளாக்களுக்கும் அவர்களுக்கும் சண்டை மூண்டது. தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் (பிரிட்டிஸ்) ஆட்சியதிகாரம் அங்கே நிறுவப்பட்டபோது, கேரளாவின் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ சக்திகளான (இந்து உயர்சாதி) ஜென்மிகளுக்கும் மாப்ளா மக்களுகும் இடையே தொடர்ந்து நிலவிய போராட்டத்தின் இடையில், பிரட்டிஸ் ஆட்சி என்ற ஏகாதிபத்திய சக்தி, மதத்தையும் மலபார் மண்ணின் தனிப்பட்ட சமூகப் பொருளாதாரக் கூறுகலையும் எவ்வாறு தன்க்குச் சாதமாக- மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பது மிக முக்கியமான ஆனல் அதிகமாகப் பதிவு செய்யப்படாத வரலாறு. இந்த வரலாற்றைத் தமிழ் மக்களிக்கு அறிமுகம் செய்யும் முயற்சியே இந்த நூலாகும்.
கான்ராட் உட்
-
தமிழில்: இக்பால் அகமது.
-
அலைகள் வெளீயிட்டகம்.
-----------------------------
விலை ரூ 130
பக்கங்கள் : 296
-----------------------------
கிடைக்குமிடம்
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
1 comment:
நல்ல புத்தகம்.
மாப்ளா போராட்டம் பற்றி, கேள்விபட்டு, நெடுநாள்களாக புத்தகம் தேடிக்கொண்டிருந்தேன்.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
Post a Comment