கோத்ரா சம்பவம் தொடங்கி பார்ப்பன இந்துமதவெறிக் கும்பல் குஜராத் முசுலீம் மக்கள் மீது மிகக் கொடூரமாக நடத்திய இனப் படுகொலையை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.
இதில் படுகொலைக்குத் துணைபோன போலீசு, நியாயப்படுத்திய பா.ஜ.க.அமைச்சர்கள், கண்டும் காணாமலும் இருந்த மனித உரிமை, பெண்ணுரிமை அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். வானரபடையின் பங்கு ஆகியனவும் இடம் பெற்றிருக்கின்றது. கற்பு. சாதி மதக் கெளரவச் சின்னமாக் கருதப்படும் பெண், எல்லாக் கலவரங்களிலும் கொல்லப்படுவதை நினைவு கூறும் இந்நூல் இங்கே இசுலாமியப் பெண்கள் அடைந்த கொடுமைகளைத் தொகுத்துக் கூறுகிறது.
கலவரம் நடந்த சமயத்தில் இவ்வறிக்கையைத் தயார் செய்த பெண்கள் குழுவினர் நடத்திய கள ஆய்வும், புகைப்படங்களும் நூலில் இடம்பெற்றிருக்கின்றான.
..
முசுலீம் பகுதிகளுக்கு இக்குழுவினர் போக வேண்டாமென சில இந்துக்கள் அன்புடனும் வெறுப்புடனும் இருவிதமாகவும் எச்சரிக்கை செய்திருப்பது, குஜராத்தின் நோயை மறைக்காமல் காட்டுகிறாது.
..
அறிக்கைத் தயாரிப்பு:
பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு - தற்காலிக குழு
ஆங்கிலம் வழி தமிழில்: கலைச்செல்வன்
தொடர்புக்கு:
ஷோமா சென்,
8,anusri apartments,
184 பாஜி பிரபு நகர்,
நாக்பூர் - 440010
..
Related:
.
..
No comments:
Post a Comment