பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Tuesday, April 10, 2007

"பாரதி' ய ஜனதா பார்ட்டி"


பாரதி தமிழ் சமுதாயத்தில் பெரிய கவிஞனாய் மட்டுமல்லாது, எல்லாவற்றுக்கும் தீர்வு சொன்னவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சீர்திருத்தவாதி. அவன் பேசாத விஷங்களே இல்லை. சாதி, தீண்டாமைக்கு எதிராகப் பதிவு செய்திருக்கிறன் என்றெல்லாம் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர் - பாரதி ஆதரவாளர்கள்.

இந்த விஷயத்தில் பொதுவுடைமைக் கட்சியின் பங்கு அளவிற்குகரியது. அதுவும் ஜீவா போன்றவர்கள் திட்டமிட்டே இதைச் செய்தனர். இன்றும் இவர்கள் , பாரதியின் பார்ப்பனச் சார்புத் தன்மையௌ ஒத்துக் கொள்வதாக இல்லை. மனித விரோத கருத்துகள் ஊறிக் கிடக்கின்ற வேதங்கள், பகவத் கீதை, மநுதர்மம், புராணங்கள் இவற்றின் ஆதரவாளராகவே பாரதி கடைசிவரை இருந்திருக்கிறார் என்பதை ஆதாரபூர்வமான அழகிய நயமான நடையில் தந்திருக்கிறார் வே.மதிமாறன்.

அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய "ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்" என்ற நூலில் , பாரதியின் பார்ப்பனப் போக்குப் பற்றி பல்வேறு ஆதாரங்களை தெரியப்படுத்திருந்தார். 'ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி , இந்தியாவை ஆரியருக்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி, பாரதியிடம் நிறைந்து இருந்திருக்கிறது' என்கிறார்.

பெரியார், அம்பேத்தகர் போன்றவர்கள் தம் வாழ்நாளில் சாதி , மதம், புராணங்கள், சடங்குகள் எனப் பார்ப்பனிய சுரண்டலுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, பாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போலி சீர்திருத்த கருத்துகளைத் தன் பாடலில் சொல்லியதை வைத்து 'மகா சீர்திருத்தவாதி, புரட்சிக்காரன்' என்று பெத்தப் புகழ்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இப்படி பாரதி ஆதரவாளர்களையும், பாரதியையும் அம்பலப்படுத்தி வந்த இந்த நூலை, இரண்டாம் பதிப்பாகக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

முதல் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் நீண்ட இடைவெளி இருப்பினும், தற்போது இந்நூலைக் கொண்டு வருவதன் மூலம், பாரதியின் போக்கினை சொல்வதோடு அல்லாமல், பார்ப்பனியச் சிந்தனை - பலர் மூளையில் ஆணி அடித்து உட்கார்ந்திருப்பதை விடுவிக்க உதவும் என்பதாலும் இதனை வெளியிட்டு மகிழ்கின்றோம்.

இந்துத்துவ பார்ப்பனியம் தனது நச்சுக் கிளைகளைப் பரப்பி நம்மில் ஊடுறுவும் இக்காலத்தில் - அதற்கு எதிராக கோடரி போடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

தோழமையுடன்,
ஞா. டார்வின் தாசன்.

ஆசிரியர்: வே.மதிமாறன்

வெளியீடு: அங்குசம் ,
15, எழுத்துக்காரன் தெரு,
காலடிப்பேட்டை,
திருவெற்றியூர்,
சென்னை - 600 019

விலை: ரூ 50

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •