தண்ணீர் தனியார்மயமாக்கம் குறித்த பார்வை
வணிகம் என்றாலே அது கச்சாப்பொருட்களையோ அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையோ வியாபாரம் செய்வதே. ஆனால் 1986 முதல் 1993 வரை நடந்த உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் உலகை ஆட்டிப்படைக்கும் சர்வதேச நாடுகளிடையேயான வணிக ஒப்பந்தமான 'காட்' ஒப்பந்தத்தில் அறிவுச் சொத்துரிமை, வேளாண்மை, முதலீடு தொடர்பான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.
அதிலும் நிறைவடையாத பன்னாட்டு வணிகர்களின் முயற்சியால் 1994-ல் சேவைத்துறையை வணிகமயமாக்க சேவைத்துறையில் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஏனெனில் உலக வணிகத்தில் சேவைத்துறை 20% பங்கு வகிக்கிறது.
பன்னாட்டு கம்பெனிகள், இந்த காட்ஸ் ஒப்பந்தத்தை முதலீடு தொடர்பான முதலாவது பன்முக ஒப்பந்தம் என்கிறது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட முதலீட்டின் மீதான பன்முக ஒப்பந்ததிற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால்., புதிய மொந்தையில் பழைய கள்ளாக உருவாக்கப்பட்டதே இந்த காட்ஸ் ஒப்பந்தம்.
..
சேவைத்துறையையும் வணிகமாக்குவது பெருந்திரளான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாகும். எடுத்துக்காட்டாக இங்கே தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை இந்நூலில் விவரித்துள்ளோம்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகின் நீர்த் தேவை மூன்று மடங்காகியுள்ளது. தட்டுப்பாட்டில் தனது சந்தை வாய்ப்பைத் தேடும் வணிகர்கள் இத்தகைய சூழ்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு முன்வைக்கும் 'புரட்சிகரமான' தீர்வு என்ன தெரியுமா?.
தண்ணீரைத் தனியார்மயமாக்குவதுதான்.
சர்வ்தேச ஒப்பந்தங்களின் விளைவாக தண்ணீர் துறையில் ஏற்படும் விளைவுகளை சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில் முன்வைக்கிறது இந்நூல்.
தண்ணீர்ச் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி, அதற்கு வணிகரீதியாகத் தீர்வுகாண முயற்சித்தால் அது புவியை நாசப்படுத்துவதுடன். சமத்துவமின்மையை அதிகப்படுத்தும். ஒரு சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்ற சொற்களின் உண்மையை தெளிவாகப் புலப்படுத்தும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.
ஜே.பால்பாஸ்கர்
..
வெளியீடு
.
அமைதி அறக்கட்டளை
அமைதி அறக்கட்டளை
திண்டுக்கல்
.
விலை ரூ 50
..
Related:
..
No comments:
Post a Comment