பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, July 11, 2007

"சிவாஜி - த லூஸு" தமிழினத்தின் விடி வெள்ளி?...

அன்பர்களே,உலகத்துல மூலை முடுக்குன்னு பாக்காம எல்லா பகுதில இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்துல பைத்தியம் பிடிக்குமா? அந்த அதிசயம் நடந்துச்சு.. போன ஜூன் 15ஆம் தேதிக்கு.. இன்னும் சில பேருக்கு அது தெளியவேயில்லை. தமிழ்நாட்டிலும், மற்றும் உலகத்துல எங்கெங்கோ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்சினை..ஒரே கேள்வி.. சிவாஜி பார்த்தாச்சா? படம் எப்படி? . - இப்படி தான் நம்ம டி.வி. பேப்பர், நெட் எல்லம் பாத்தா யோசிக்க தோணுது..
..
ரஜினி ரஜினி மாதிரியெ இல்லையாம் ( குரங்க மனுசனா மாத்தி விட்ட மாதிரியோ..? )அவ்வளவு அழகா இருக்காராம்..இன்னாள் முதல்வர் குடும்பத்தோட பார்க்கிராறாம்..அடுத்ததா முன்னாள் முதல்வரும் பார்க்கிராறாம்... பத்தாததுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் வேற பாத்துட்டு அவங்க கட்சி காரவுக எல்லாம் கண்டிப்பா பாக்கணுமுன்னு கட்டளை போட்டுருக்காராம்..நம்ம ஒயிட் ஹவுஸ் தாதா ஜார்ஜ் புஷ்ஷு கூட இராக்குல இருக்கிற பஞ்சாயத்தெல்லாம் சட்டு புட்டுனு முடிச்சுப்பிட்டு சிவாஜி பாககலாம்னு இருக்காராம்..
.
என்ன நடக்குது இங்க? ஒரு படத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்.. ரஜினி ரசிகன்னு சொல்ற ஆளுங்கள விடுங்க..நம்ம சராசரி ஆளுங்களுக்கே இந்த பில்டப்புகள பார்த்து ஒரு உறுத்தலும் இல்லையே?.. அப்படின்னு பல கேள்விகள்..உண்மையில இதன் பின்னணி என்னங்கிறத எல்லாம் ஒரு பொதுவான ஆளு கேக்கிற கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.. இனி அது மாதிரியான கேள்விகளும் அதுக்கான பதில்களும் ( நான் புரிந்து கொண்ட வரைக்கும்...)
..
"இப்ப சிவாஜி படத்துக்கு பண்ற அத்தனை களேபரமும், ரஜினியா பண்றாரு? அவங்க ரசிகர்கள்னு சொல்லிகிட்டு தானே பண்றாங்க.. இதுக்கு போய் எல்லோரும் ரஜினியை ஏன் திட்டுறாங்க.. என்னங்க நியாயம் இது?"
..
உண்மைதான்..பொதுவா இப்பல்லாம் ரஜினி படத்துக்கெல்லாம் படம் தயாரிக்கிற ஆளுங்க விளம்பரம் பண்ண வேண்டியதில்லை.. சும்மா ஒரு பிட்டு போட்டா போதும்.. எல்லாத்தையும் மீடியாவே பார்த்துக்குறாங்க..
..
அதிலயும் இந்த ரசிகர்கள் ஒரு படம் வர்ரதுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் பண்றதும், காவடி தூக்கிறதும் பார்க்கிறப்போ கூடிய சீக்கிரமே நம்ம அப்துல் கலாம் சொல்ற மாதிரி இந்தியா வல்லரசாகிடுமோன்னு தான் தோணுது. ஆனா உங்கள் கேள்விப்படி ரசிகர்கள் செய்யுற சேட்டைகளுக்கும், அதிகப்பிரசிங்கித்தனதுக்கும் ரசிகன் மட்டுமே காரணம்...ரஜினி ஒரு அப்பாவி..பாவம் அவருக்கு எதுவுமே தெரியாதுன்ற மாதிரி இருக்கிறது..இது உண்மையா?..
..
எங்கியோ இமயமலையில இந்தியால நூறு கோடி பேருக்கும், அத்தனை பத்திரிகை, டிவிக்கும் தெரியாம 2000 வருசமா ஒளிஞ்சிகிட்டு இருந்த பாபாவை கண்டு பிடிச்சி சொன்னவருக்கு இங்க நம்ம ஊருல நடக்கிற விசய்ம் தெரியாதா?அவருக்கு தெரியும்..இப்படியெல்லாம் நடந்தா தான் அவர் படத்துக்கு விளம்பரம் இருக்கும்னு …கூட்டம் வரும்னு..அதுவுமில்லாம ஒவ்வொரு படத்துலயும் நம்மாளுக்கு "உன் வாழ்க்கை உன் கையில்"னு அட்வைஸ் பன்றவர்க்கு இப்ப ரசிகன் சொந்த வேலைய விட்டுட்டு இப்படி தன்னோட படத்துக்கு வெட்டியா காவடி தூக்குறது தப்புன்னு..
எல்லாம் தெரிஞ்சும் சும்மா அமைதியா இருக்குறது எதுக்கு?..
..
சரி ரசிகன் தானா வந்து ஏமாளியா இருக்கான்.. அதுக்கு ரஜினி என்ன பண்ணுவாருன்னு நீங்க கேக்கிறது புரியுது..ஒரு உதாரணத்துக்கு நிறைய போலி சாமியார் கதை படிதிருப்பீங்கல்ல.. (சாமியார்னாலே போலி தானே, அதுல என்ன நல்ல சாமியார், போலி சாமியாருன்னு என்பது வேறு விசயம், அதை அப்புறம பார்த்துக்கலாம்). எந்த சாமியாராவது பக்தனிடம் அடிச்சு பிடுங்கியிருக்கிறார்களா? எல்லாமே பக்தனை பக்தி மயக்கத்தில் வச்சுக்கிட்டே நம்மாளு அடிக்கிறது தான்.. பிரேமானந்தாவையெல்லாம் இப்பவும் ஜெயில்ல வந்து பக்தர்கள் பாக்குறாங்களாம்..
நம்ம ஜெகத்துகுரு சங்கராச்சி கூட வெளில வந்து ஜெகஜோதியா கல்லா கட்டிட்டு தான் இருக்கார். இன்னமும் இவனுகள சில பேரு நம்பிகிட்டு தான் இருக்காங்க..இப்ப உங்களுக்கு பக்தன் மேல் வருகிற அதே கோபம் சாமியார் மேலும் வர வேண்டும்.. அது தான் நியாயம்..
..
இன்னும் சொல்லப் போனா ரஜினிக்கு தெரியாதா.. இப்போ தமிழ் நாட்டில் எத்தனை பேர் படம் பார்ப்பார்கள் அதில் எத்தனை பேர் தியெட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று.. அப்புறமும் இத்தனை கோடி போட்டு தியேட்டர் முதலாளி படப்பெட்டி வாங்கினால் அவன் நியாயமான தியேட்டர் கட்டணம் வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியாதுன்னு.. அப்ப யாருக்கு மொட்டை அடிக்கலாம்.. வேற யாரு.. நம்ம ரசிக மக ஜனங்களை தான்..
ஒவ்வொரு டிக்கெட்டும் 500 ரூபாய் 1000 ரூபாய் என்று செய்திகள் வருகின்றன. (ஏறக்குறைய எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வருகிறது, சிவாஜி பட டிக்கெட் கட்டணத்தை பற்றி... ஆனா அரசு தரப்பில இது பத்தி ஒரு நடவடிக்கையும் இல்லையே.. கலைஞருக்கும் ரஜினிக்கும் உள்ள உள்குத்து என்னன்னு விளங்குதா?..) இப்படி மக்களை (அதுவும் சொந்த ரசிகனையே) கொள்ளை அடிக்கிற கூட்டணியின் காரணகர்த்தாவை, தலைவனை எப்படி அடிப்படையில் அப்பாவி என்றும் யோக்கியன் என்றும் சொல்ல முடியும்? எனக்கு புரியலையே சாமி..
..
"அதெல்லாம் சரி..ரஜினி அவர் சொந்த உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்..அவருக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.. அவருக்கு நல்ல மார்க்கெட்டு இருக்கு..அவர் கோடி கோடியா சம்பாதிக்கிறார்..உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்?.. "
..
ரஜினி என்ன உழைக்கிறாருங்கிரது இருக்கட்டும்..பொதுவா ஆரம்பத்துல கஷ்டப் பட்டு தான் எல்லோரும் எந்த தொழிலிலும் முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இங்க எந்த உயரதுக்கு அப்படிங்கிறதில தான் பிரச்சினையே இருக்கு..எந்த அளவுக்கு?... இவ்வளவு தூரம் தெரிந்தே நம்மை சுரண்டுவதையும் நாம் அதை அங்கீகரிக்கிற அளவுக்கும்...வேறொண்ணும் வேணாம்.. பஸ்ஸுல பிக்பாக்கெட்அடிக்கிறவன் திறமைய கூட யோசிச்சு பாருங்க.. ந்ல்ல கூட்டமான பஸ்ஸ தேர்ந்தெடுக்கணும்.. அத்தனை பெரிய கூட்டத்துல யார்கிட்ட பர்சுல கணம் இருக்குன்னு கண்டு பிடிக்கணும் அப்புறம் அத்தனை கூட்டத்திலயும் யாருக்கும் தெரியாம பர்சை உருவனும்..கொஞ்சம் எவனுக்கும் தெரிஞ்சாலும் உதார் விட்டு தப்பிக்கணும்..
( கொஞ்சம் அசந்தாலும் மக்கள்கிட்ட சிக்கினா சிதறு தேங்காய் தான்..) பின்னாடி கூட்டாளி கிட்ட கை மாத்தி விடணும்.. அப்புறம ஓடுற பஸ்ஸுல இருந்து இறங்கி எஸ்ஸாகனும்.. எல்லாம் முடிச்சுட்டு கூட்டாளியோட கூடி பிரச்சினை இல்லாம பங்கு போடணும்.. இப்படி எவ்வளவு திறமை வேண்டி இருக்கு ..இப்ப நீங்க பிக் பாக்கெட் அடிக்கிறவன் மேல கோபப் படுவீங்களா..
இல்லை அவனோட திறமைய மெச்சுவீங்களா? இல்ல பர்ஸை பறி கொடுத்த ஆளு மேல பாய்வீங்களா? பொதுவா ஒரு வசனம் சொல்லுவாங்க .. ஒரு மனுசன் பட்டினியோட இருக்கிறதை விட அவன் பட்டினிக்கு என்ன, யாரு காரணம்னு தெரியாம இருக்கிறது தான் கொடுமைன்னு. அது மாதிரி ஒரு மனுஷன் தன்னை அறியாம தன்னை சுரண்ட அனுமதிக்கிறதுவும் தான் கொடுமை.."
..
நீங்க என்ன சொன்னாலும் எத்தனை பேரு ரஜினிய பாராட்டுறாங்க..அவங்கெல்லாம் முட்டாளா? எல்லா மீடியாவும் தான் சிவாஜி பத்தி பேசுறாங்க..
..
"இது ஒரு பெரிய கூட்டணி.. ரஜினிக்கு சிவாஜிய வியாபாரம் செய்ய (விளம்பரப்படுத்த) ஊடகங்கள் எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு ஊடகங்களுக்கும் அவங்க வியாபாரத்துக்கும் ரஜினி மாதிரி ஒரு பிம்பம் தேவை.. இப்ப "சிவாஜி ரஜினி மொட்டை அசத்தல்" அப்படின்னு குங்குமமோ இல்ல "சிவாஜி-வெளி வராத ரகசியங்கள்" அப்படின்னு ஆனந்த விகடனோ ஒரு செய்தி போட்டா உடனே பத்திரிகை விற்பனை எகிருதில்லை.. அதுக்காகவேணும் போட்டி போட்டு ஒருதருகொருத்தர் பரபரப்பு பண்ணி பில்டப்பு கொடுப்பார்கள். அது போக நம்ம படிச்சதுகள் கூட இலவசமா விளம்பரம் செய்யுதுகள்..புதுசா புதுசா சிவாஜி ஸ்டில்ஸ், வீடியோன்னு இலவசமா மெயில்ல சுற்றுக்கு விட்டு ..
.
"பெரிய தலைகளெல்லாம் கூட சிவாஜி படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றதும் அது பேப்பர்ல வர்றதுமா இருக்கே..(கருணா நிதி, ஜெயலலிதா, சந்திர பாபு நாயுடு, அப்புறம் திரையுலகத்துல எல்லோரும்) அவங்களுக்கு கூடவா தெரியாது?.."
.
நம்ம திரையுலகத்துல தெரியும்.. அரசியல்ல இருக்கிறத விட மோசமான சொறிஞ்சு விடுற கூட்டம் நிறைய உண்டு.. (அதுதான் இன்னும் டி ஆர் மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞ்சமும் வெட்கம், கூச்சம் இல்லாம கலர் டை அடிச்சுட்டு ஹீரோவா நடிக்கிறார், கூட இருக்கிற யாரும் சொல்றதில்ல யோவ் இது கேவலமா இருக்குன்னு) அதுனால திரையுலகத்துல இருக்கிறவங்க சொல்றதை விட்டுரலாம்..அது ரஜினிக்கு சொறிஞ்சு விடுற வேலை. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ , சந்திரபாபு நாயுடுவோ படம் பார்த்து கருத்து சொல்லுறது விளம்பரம் கொடுக்கிறது எல்லாம் அவங்க சொந்த நலனுக்காகவும் தான்..யாரு வேணாலும் தான் படம் பார்க்கலாம்.. நீங்களும், நானும் படம் பாக்கிறோம் அது மாதிரி அவங்களும் மனுசங்க தானே.. அவங்களும் படம் பார்க்கட்டும். தப்பில்லை... இங்க வித்தியாசம் என்னன்னா அவங்களுக்கு சிறப்பு காட்சின்னு போட்டு அதை மீடியாவுக்கு சொல்றதும், அப்புறம் நிருபர்கள் எல்லாம் வந்து படம் எப்படின்னு கருத்து கேட்டு அத பேப்பர்ல போடுறதுன்னு நாடகம் எல்லாம் எதுக்கு? ரஜினிக்கும், AVMக்கும் சிவாஜிக்கான விளம்பரம் .. மு.க.வுக்கும் ஜெ.ஜெ.க்கும் ரஜினி கூட எங்க ஆளுன்னு காமிக்கணும்..அதிலயும் சிவாஜி படம் என்னமோ கருப்பு பணத்தை பத்தியாமுல்ல.. மு.க., ஜெ.ஜெ. கிட்ட இல்லாத கருப்பு பணமா.. நம்மள பத்தி எதுவும் படத்துல போட்டு கொடுத்துட்டானுங்களோன்னு செக் பண்ண வந்திருப்பாங்களோ..) அதிலும் நம்ம சந்திர பாபு நாயுடு ஒரு படி மேல போயி ரஜினி மூணாவது அணியில சேரணும்னு ஒரு கோரிக்கை வேற.. கெரகம்டா சாமி
...
"என்ன தான் இருந்தாலும் ரஜினி படம் பாக்கிறவன் அவனவன் சந்தோசத்துக்காக ஒரு தடவை பிளாக்குல டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு தான் போகட்டுமே..அதிலென்ன தப்பு?..
..
இதுக்கு போய் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?..
..
"இதுக்கு நம்ம சங்கர் படத்துல இருந்தே ஒரு வசனம் சொல்றேன்..
அஞ்சு பைசா திருடுனா தப்பா?...
இல்லை..
அஞ்சு அஞ்சு பைசாவா அஞ்சு வருசத்துக்கு அஞ்சு கோடி பேருகிட்ட திருடுனா தப்பா?...ம்ம்ம்ம்ம்..??
..
( ஆனா இங்க சிவாஜி டிக்கெட் போன விலையெல்லாம் தமிழ் நாட்டுல பல பேரோட அரை மாச சம்பளம்..)
..
அது சரி எல்லாம் கோளாறு சொல்றீங்களே..படத்தோட கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்கிறீங்களா.. ஸாரி.. நான் அம்புலி மாமா, காமிக்ஸ் கதையெல்லாம் படிக்கிறதை விட்டு ரொம்ப வருசமாச்சு...
சிவாஜி பில்டப்புக்கு
..
சில உதாரணங்கள்..

  • * சிவாஜி படத்தை செல் போனில் படம் பிடித்த 3 ரசிகர்கள் கைது - பத்திரிகை செய்தி .. ( செல் போன்ல படம் பிடிசு திருட்டு VCD போட்டு வித்துடுவங்களோ.. )

  • * ரஜினி மொட்டை கெட்டப்புல வருகிற போட்டோவை அனுமதியில்லாம பிரசுரம் செய்த பதிரிகைகளுக்கு சங்கர் வக்கீல் நோட்டீஸ்.(என்ன கொடுமை சரவணன் இது?...)

  • * படத்தில் 5 நிமிடம் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டில் ரஜினி வெள்ளைக் காரன் போல் தோன்றுவதற்கு ஒரு பெரிய சாப்ட்வேர் டீம் ஒரு வருசம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்( இது டூ மச்சு.. த்ரீ மச்சு .. ஃபோர் மச்சு....)

  • * இப்ப எம்ஜியார், சிவாஜி எல்லாமே ரஜினி தான். அவர் தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் இல்லை.. இப்ப சர்வதேச சூப்பர் ஸ்டார் ஆக முன்னேறியுள்ளார் - கே. பாலசந்தர் ( ஆமாய்யா.. நேத்து தான் ரசியால கூட தஸ்தரோய்க்கி ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிசிருக்காங்க.. தஸ்தரோய்க்கின்னா ரசிய மொழியில அதிரடி மன்னன்னு அர்த்தமாமுல்ல?)

  • * சென்னையில முதல் 3 மாசத்துக்கு தியேட்டர் எல்லாம் டிக்கெட் புக்கிங் முடிஞ்சு போச்சு - ண்DTV செய்தி ( தியேட்டருக்கு 4 ஷோன்னு கணக்கு பண்ணாலே சராசரியா ஒரு 50 லட்சம் டிக்கெட் புக் பண்ணியிருக்கணுமேய்யா சென்னையில மட்டும்.. சொல்லுங்க...)

  • * ரஜினி 25 வருசதுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதை விட இளமையா சிவாஜி படத்தில் இருக்கிறார் - ஒரு பேட்டியில் சிவாஜியின் தொழில் நுட்ப கலைஞர்...
..
( அய்யோ போதும்டா சாமி...)
..


எப்படி இருந்த நான்...இப்படி ஆகிட்டேன்?......


மேக்-அப் கலைஞருக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்க
...
----
Related:
************

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •