பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Sunday, December 9, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - திரைப்பட விமர்சனம்

ஆதிக்க சாதிவெறி மறைத்த யதார்த்தம் !

மக்களின் யாதார்த்த வாழ்க்கையினை சொல்வதும், சமூக ரீதியில் அவர்களை சிந்திக்க தூண்டுவதும், பிற்போக்கு அடிமைத்தனங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலும், போராட்டத்தின் அவசியத்தை உணரும் வகையிலும் இருப்பதும் - இருக்கவேண்டியதும் தான் கலை இலக்கியம். "கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே" என்பதன் அர்த்தம் இதுதான்.

இன்று யதார்த்தம் என்ற பேரில் இல்லாததையும் - திரித்தும், சமூக பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியிலானது என்று திசை திருப்பியும், அடிமைத்தனங்களை மெஞ்சியும், போராட்டம் என போலிஎதிர்ப்பையும் கொண்ட கலைஞர்களை அன்றாடம் பார்ப்பனியமும், மறுகாலனியாதிக்கமும் உற்பத்தி செய்து வருகிறது.

அதில் திரைப்பட துறை உற்பத்தியில் தற்போது முன்னணியில் இருப்பவர்கள் தங்கர்பச்சன், சேரன், சீமான் போன்றவர்கள். அவர்களில் தங்கர்பச்சான் உடைய 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற 'திரைப்பட'த்தை பற்றிய பார்வையே இந்த பதிவு.

படம் வெளிவருவதற்கு முன்னர் இசை வெளியீட்டு விழா என்ற பேரில் நிறைய கலைஞர்கள் (?) பங்கேற்று ஒருவரை ஒருவர் சொறிந்து மன்னிக்கவும் புகழ்ந்து கொண்டார்கள். அப்ப படத்தை பற்றி கூறிய வார்த்தைகள் படையாச்சி (சத்யராஜ்) அரிக்கன் லைட்டை துடைக்கும் அழகு, ஊருல எல்லோரும் தூங்கியிருப்பாங்கல ( வாழ்ந்து கெட்டவராக வரும் சத்யராஜ் சொந்த ஊருக்கு இரவில் போகும் போது கேட்கும் கேள்வி) என்று சில வசனங்களை கூறி தங்கர் புகழை பாடினர்.

இப்படி லைட்ட துடைப்பதில் என்னடா அழகு, இரவு-ல் தானடா மனிதன் தூங்குவான் என்ற கேள்வி யாருக்கும் கோபமாக கேட்க தூண்டும். சரி படம் வெளிவந்துவிட்டது, பார்த்துவிட்டும் வந்தாச்சு. என்ன சொல்லியிருக்கார் தங்கர்பச்சான் என்று பார்ப்போம்.

"சத்யராஜ் பஸ்-க்கு போதுமான காசு இல்லாமல் கண்டக்டரிடம் தன்னை பத்திரக்கோட்டை ஊருக்கு அழைத்து செல்லும்மாறு கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துக்கொண்டும் இருக்க பஸ்-ல் இருக்கும் சத்யராஜ் ஊரை சேர்ந்த ஒரு இளைஞன் சத்யராஜ்-க்கு டிக்கெட் போட்டு உடன் அழைத்து வருகிறார்...படம் ஆரம்பம் இதுதான். இந்த பயணத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையினை மாதவ படையாச்சி (சத்யராஜ்) நினைத்துப்பார்க்கிறார்.

ஊரூல விவசாயம் செழிப்பாக செய்து, வசதி வாய்ப்பாக வாழ்கிறார் மாதவ படையாச்சி . தன் ரெண்டு பெண்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தன் மூன்று மகன்களில் இரண்டு பேருக்கு திருமணம் செய்து மருமகள்கள், பேரன் பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். வர்ற வருமானத்தில் ஊரில கஷ்டப்படுபவர்கள், தன் நண்பர் ஹாஜா பாய் (நாசர்)க்கும் என நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் மகன் அந்த ஊர் வண்ணார் வீட்டு பெண்னை காதலித்து அந்த பெண்னும் கர்ப்பம் தரித்து விடுகிறாள். இந்த விஷயம் மாதவ படையாச்சியின் மனைவிக்கு (அர்ச்சணா) தெரிய வருகிறது. படையாச்சி மனைவி இந்த திருமணம் மட்டும் நடந்தது என்றால் நம் சாதி சனம் எல்லாம் காரிதுப்பும் அதனால் கூடாது என மகனை அடிக்கிறாள், மகன் கண்டிப்பாக அந்த பெண்ணை தான் கட்டுவேன் என சொல்கிறான். இதை தூரத்தில் இருந்து கேட்டுவிடுறார் படையாச்சி.

அப்ப இருந்து துக்கமாக இருவரும் இருக்க (அவர்களுக்குள்ளும் இது பற்றி பேசவில்லை) அன்று இரவு தன் சொந்தக்காரன் தூண்டுதல் பேரில் மற்ற இரண்டு மகன்கள் பணம் வேணும், நாங்களும் எங்க பெண்டாட்டிகளும் டூர் போக போறோம் என்கின்றனர். அறுவடை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போகவேண்டியது தானே என மாதவ படையாச்சி கேட்க அவர்கள் மறுத்துவிட்டு வாக்குவாதம் ஆகிறது. நாங்க (மாதவ படையாச்சி) ஏற்கனவே நொந்துபோய் இருக்கோம் எங்களை ஏண்டா இப்படி பேசுற என வருந்துகிறார்.

இதற்கிடையில் மருமகள்கள் இருவரும் வந்து நீயே வேலை செய்யலாமே என கேட்க, படையாச்சி மனைவி எழுந்து வந்து, எப்படி மாதவ படையாச்சியை நீ கேள்வி கேட்கலாம், அவரு சாமிடி என பேச ஆரம்பிக்கிறாள். பின் மகன்கள் மாதவ படையாச்சியிடம் 'நீ போனாதான் எங்களுக்கு நிம்மதி' என கூற... அன்று இரவே ஊரை விட்டு கிறம்புகிறார்கள் மாதவ படையாச்சியும் அவர் மனைவியும்.

நேரே ஆம்பூர் வர அங்கு நாசர் வீட்டுக்கு செல்கின்றனர். அவர் இவர்கள் செய்த உதவி காரணமாக தன் சொந்த வீட்டில் தங்க வைக்கிறார். பின் தங்களுக்கு பக்கத்து கிராமத்திலே தங்கி ஆடு வியாபாரம் செய்ய உதவி கேட்க அதனை நாசர் செய்து கொடுக்கிறார். அதற்கான பணத்தை அவ்வப்போது திருப்பிக்கொடுக்கிறார். பின்னர் அந்த ஊருல மாடுபிடிக்க வரும் தன் சொந்த ஊர்க்காரரிடம் தன் கடைசி மகன் கஷ்டப்படுவதை பார்க்கிறார். அப்போது அவன் அந்த வண்ணார் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கஷ்டப்படுகிறான் என தெரியவருகிறது.

அன்று இரவு இந்த சம்பவத்தை தன் மனைவியிடம் கூறுகிறார். அப்போது நாம மட்டும் ஊருலேயே இருந்து இருந்தா அந்த பெண்னை திருமணம் செய்துகொள்ள விட்டுயிருப்போமா என கோபமாக கதறுகிறாள் மனைவி. (மனைவி மட்டும் தான் இந்த விஷயத்தை பற்றி படத்தில் பேசுகிறாள். இறுதி வரை மாதவ படையாச்சி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.)

ஒரு கட்டத்தில் ஊருக்கு சென்று விடுவது என தீர்மானிக்கிறார்கள். காலையில் கிளம்புவதாக இருக்க, அன்று இரவே மனைவியை பாம்பு கடித்து இறந்து போகிறார். இறக்கும் முன் தன் சாம்பலையாவது நம் சொந்த ஊரில் போய் கரைக்கும் மாறு கேட்டுக்கொள்கிறாள்.

அதன் பின்பும் ஊருக்கு போக நாசர் சொல்ல, எப்படி மனைவியின் பிணத்துடன் சென்றால் 'என்ன நினைக்கும் ஊர் சனம்' என சொல்லி மறுத்துவிட.... மீண்டும் நாசர் வீடு. பின் நாசர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பெங்களூர் செல்லும் முன் மாதவ படையாச்சி க்கு 6 ஏக்கர் நிலத்தையும் பணமும் கொடுத்துவிட்டு செல்கிறார்.

நிலத்தையும், பணத்தையும் நாசர் மச்சான்கள் பறித்துகொள்ள மாதவ படையாச்சி கிளம்புகிறார். டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ரோடுகளில் அலைகிறார். இறுதியாக பஸ்-ல் கிளம்புகிறார் சொந்த ஊருக்கு, இதுதான் படத்தின் ஆரம்ப காட்சி. ப்ளாஷ்பேக் முடித்துகொண்டு நள்ளிரவில் சொந்த ஊருக்கு (பத்திரகோட்டை) வருகிறார்கள்.

தன் பிள்ளைகள் சொத்துகளை இழந்து கஷ்டப்படுவதையும், தன் கடைசிமகன் வண்ணான் பெண்னை கல்யாணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டு முந்திரிக்காட்டில் குடியிருப்பதாகவும் தன்னுடன் வந்த இளைஞனின் அம்மா சொல்கிறாள் பின் ஊருக்குள் நடந்து முந்திரி தோப்பில் இருக்கும் தன் மகன் வீட்டுக்கு போய் பார்க்கிறார். அனைவரும் தூங்கி கொண்டு இருக்க குழந்தை ( மாதவ படையாச்சி பேரன்) மட்டும் "பசிக்குது அப்பா" என அழுதுகொண்டு இருக்கிறது.

இறுதியில் ஒருமுறை குழந்தையினை தூக்கி பார்த்துவிட்டு வந்து விடுகிறார் தன் சொந்த வீட்டு திண்ணையில் தூங்குகிறார். அதிகாலை ஒரு மரத்தின் அடியில் இறந்து கிடக்க ஊரே அழுது புலம்ப....மகன்களும், மருமகள்களும் அழுகிறார்கள்."

அன்றாடம் நிகழ்கின்றவற்றை படமாக எடுத்தும் அதில் திட்டமிட்டு சிலவற்றை மறைத்து விடுவதால் மக்களுக்கு உண்மையை அறிய வாய்ப்பு இல்லாமல் போச்சு. ஆனாமுழு பொய்-னை விட அரைகுறை உண்மை ஆபத்தானது என்று தங்கர் மறந்த (மறைத்த) நோட்டை பார்க்கவேண்டியது அவசியம்.

படத்தில் வரும் மாதவ படையாச்சியின் வர்க்க பின்னணி என்னவென்று பார்த்தோமானால் ஊரில் வளமான நிலத்துக்கு சொந்தக்காரர். கூடுதலாக படையாச்சி. அதன் உடன் விளைவாக ஆதிக்க சாதி உணர்வில் ஊறி இருப்பவர். பொதுவாக இந்த வர்க்கத்துக்கே உரிய சிந்தனை என்னவென்பதை பலர் பார்த்திருக்கலாம். அந்த சிந்தனையானது வயதான காலத்தில் இத்தகைய ஆண்கள் அதிகார தோரனையில் எதிர்ப்பே இருக்க கூடாது தனக்கு என்று நடந்து வருவார்கள். அவ்வாறு சிந்தித்து வரும் படையாச்சி வாழ்க்கையில் நடக்கும் கதை இது என்பதை கருத்தில் கொண்டு படத்தின் மீதான கண்ணோட்டமே அந்த மறைந்த நோட்டைனை நாம் கண்டறிய முடியும்.

சராசரி நிகழ்வுகளான ஒரு சின்ன விஷயத்துக்கு மகனுடன் கோபித்து கிளம்பி போய் இறுதியில் வருகிறார் மாதவ படையாச்சி. ஆனால் அதைவிட பலமடங்கு முக்கியமான தன் கடைசி மகன் ஒரு வண்ணான் வீட்டு பெண்னை காதலித்தையும், திருமணம் செய்து கொணடதையும் கண்டித்து தன் மனைவி பேசிய போது மெளனமாகவே அதனை ஆமோதிக்கிறார் மாதவ படையாச்சி.

தன் மாமன் வீட்டு பெண்னை சொந்த சாதியினை சேர்ந்தவன் காதலித்து கர்ப்பம் ஆக்கியதை கேட்டு அவனை அவளுக்கு திருமணம் செய்து வைக்கிற படையாச்சி அதுவே தன் வீட்டில் நடக்கும் போது பெண் வன்னார் இனத்தை சேர்ந்தவர் என்பதால் மெளனம் சாதித்து ஆமோதிக்கிறார்.

இங்கு தான் படையாச்சி வர்க்கபார்வையினை சற்றுகீரி பார்க்க வேண்டும்.கதையில் படையாச்சி மகள் இருந்து அவள் ஒரு வண்ணான் வீட்டு பையனை காதலித்து கர்ப்பம் தரித்து இருந்தால் என்ன செய்துயிருப்பார். இதனை திரைப்படத்தில் கவனாமாக தவிர்த்து கதைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை திரையில் தேடினால் பார்க்க முடியாது. நிஜத்திலேயே பார்க்க முடியும்.

2003-இல் வன்னியர் சாதியை சேர்ந்த கண்ணகி தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த முருகேசனை காதலித்ததால் இருரையும் விஷம் கொடுத்து கொன்றனர் வன்னிய சாதிவெறியர்கள். போன மாதம் வன்னியர் சாதியை சேர்ந்த சங்கர் என்ற ஐ.டியில் வேலை பார்ப்பவன் தன் அக்கா நாயக்கர் சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ததை அடுத்து கர்ப்பினியான அக்காவை அழைத்து வந்து அப்பனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டான்.
இதனை எல்லாம் படத்தில் வைக்க முடியாது என்பதலேயே அதற்கேற்ப கதையினை மாற்றி மெளனமாகி விட்டார் மாதவ படையாச்சி. காரணம் என்னவென்றால் இந்த படையாச்சி வேற யாரும் இல்லை தங்கர்பச்சான் தான்.

தங்கர்பச்சான் பற்றி தெரிந்து கொண்டால் மாதவ படையாச்சி சொல்லாதவற்றை அறிய முடியும்.

சாதித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு தன் சாதிபற்று(வன்னிய) காரணமாக அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தயாரித்து வழங்கியவர் தங்கர்பச்சான் அவர்கள்.

பின்னர் 'மருத்துவர்' ராமதாஸ் அவர்கள் தங்கள் வன்னியர் சாதிக்கு துரோகம் செய்கிறீர்கள், தலித்துகளுக்கு வக்காலத்து வாங்கி வருகிறீர்கள் எனவும் "டாக்டர் ஐயா அவர்களுக்கு மனம் திறந்த மடல்" என எழுதியவர்களில் தங்கர்பச்சானும் ஒருவர்.

ஆதலால் படத்தில் மாதவ படையாச்சி தன் மகன் அந்த பெண்னை தனது மகன் மண உறவு இல்லாது (தொடர்பு) மட்டும் வைத்து இருந்தால் இதனை வெளிப்படையாகவே ஆமோதித்து மகிழ்ந்து இருப்பார் படையாச்சி எனபதே யதார்த்தமாக இருக்கிறது.

மொத்தத்தில் படத்தில் 'நிலப்பிரபுத்துவம்' மற்றும் 'சாதி பெருமை'யினை கதாநாயகன் மாதவ படையாச்சி மூலம் தங்கர்பச்சான் அவர்கள் யதார்த்தம் என்று தூக்கி நிறுத்துகிறார்.யதார்த்தம் என்று சாதிவெறியினை காண்பிப்பதை ஒத்துக்க முடியுமா, உன் கருத்தை என்ன அதில் என்று சொல்லு என்பது தான் இந்த போலி யதார்த்த கலைஞர்களை சட்டையினை பிடித்து கேட்க வேண்டிய கேள்வி.

இதற்கிடையில் படத்தில் ஆங்காங்கே விஷமக் கருத்துக்களை தூவி இருக்கிறார்.

ஊருக்கு வரும்போது விவசாயம் பொய்த்து போனதற்கு மாதவ படையாச்சி சொல்கிறார், பூச்சி மருந்து போட்டதால தான் இந்த நிலைமை என. பூச்சி மருந்து போட்டு தான் ஆக வேண்டும் என்ற விதைகளை உருவாக்கி இரண்டை லாபத்தை பன்னாட்டு கம்பெனிகள் பார்ப்பதற்கு 'பசுமை புரட்சி' என்ற பெயரில் வழி ஏற்படுத்தி கொடுத்ததே ஆட்சியாளர்கள் தான். தங்கர் என்னான்னா பூச்சி மருந்து என்று 2007-ல வந்து பூ சுற்றுகிறார்.

லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், விவசாயத்திலிருந்து துரத்தபட்டு தினமும் ஆயிரக்கணக்கனவர்கள் இந்திய பெருநகரங்களில் கூலிகளாக மாறிவருகின்ற சூழ்நிலையில் இதற்கான காரணத்தை பூச்சி மருந்துகளில் ஆராய்கிறார் தங்கர்பச்சான்.

ஊருக்கு வந்து குழாய் தண்ணீரில் குளிக்கும் போது ஏன் இப்ப கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கலையா என்று படையாச்சி கேட்க, அதற்கு அந்த இளைஞன் "எப்படி கிடைக்கும் அதான் பக்கத்து நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் வெட்டி மின்சாரம் தயாரித்து பக்கத்து மாநிலத்துக்கு கொடுக்கிறார்களே, அதனால 200 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை" என்கிறார்.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை தினமும் கோக்-ம், பெப்சி-யும் எடுத்து பாட்டில் போட்டு "ஆற்றுபடுக்கைகளை" விற்றுக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தங்கர்பச்சான் தமிழின வெறியினை தண்ணீர்-ல தேடுகிறார்.

ஊருக்குள் நடந்து போகும் போது அந்த இளைஞன் ஒரு கொடியினை காட்டி இந்த 'மஞ்சள்- நீல கொடி' தான்யா இப்ப 'பெரிய கட்சி' என பா.ம.க வை சுட்டிக்காட்டுகிறார். ஊருள எங்கபார்த்தாலும் மாம்பழ சின்னமாக தான் ஒளிப்பதிவு வேறு தெரியுது . பா.ம.க ஒரு வேளை ஸ்பான்சர் செய்து இருக்கலாம் என யோசிக்காதிங்க, இயக்குனரே பா.ம.க அனுதாபி(இது டிசம்பர் 2007 அப்டேட்)என்பதால் திட்டமிட்ட ஒளிப்பதிவுகள் இவை.

மற்றபடி வைரமுத்து பாடல் வரிகளை பற்றி கூறியே ஆக வேண்டும்.

மார்கழில குளிச்சுபாரு குளுரு பழகி போகும்!
மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகி போகும்!
வறுமை பழகிபோனா வாழ்க்கை பழகி போகும்!
சந்தோஷம் வெறுத்துபோனா சாவு பழகி போகும்!

"பழகி போகும்,பழகி போகும்" என்கிறாராரே இவரு பொன்னுமனி மாளிகை, தாய் பென்கள் விடுதி என இவரிடம் இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டு ஆளை சொந்த ஊருக்கே அனுப்பிவைப்போம், வாழ்க்கை பழகி போகும் என போவார்களா இந்த வைரமுத்துகள்.

2 comments:

மாசிலா said...

தங்கர்பச்சான் பற்றி பல புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.

புதுவிதமான அலசல்.

நன்றி புத்தக பிரியன்.

Anonymous said...

மிகச் சிறப்பான விமர்சனம்..

இந்த படத்தை நன்பர்கள் "அழுமூஞ்சிப்படம்" "அவார்டுபடம்" என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தியதால் கொஞ்சம் தாமதமாக பார்க்கவேண்டும் என்று தள்ளிப்போட்டு விட்டேன். ஆனால் இந்த விமர்சனம் படத்தை மிகச் சரியான கோணத்தில் அறிமுகம் செய்கிறது..

ஒருவேளை இதைப் படிக்கும் முன்பு நான் படம்பார்க்க போயிருந்தால் அதன் சோகச்சுவையில் மூழ்கி அதன் வர்க்க சார்பை பார்க்காமல் கோட்டை விட்டிருப்பேன் என்றே தோன்றுகிறது. பொதுவாகவே சினிமாக்களை என்னால் முதல்முறை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை.( ஓரளவுக்கு அதன் ஓட்டத்தில் என்னை இழந்து விடுவதால் இருக்கலாம்) அதன் அரசியலை சரியாக புரிந்து கொள்ள இரண்டாம் முறையும் பார்க்க வேண்டியிருக்கும்.. அந்த வகையில் உங்கள் விமர்சனம் எனது இரண்டரை மணி நேரத்தையும் காசையும் காப்பாற்றி விட்டிருக்கிறது.. அதற்காக ஒரு தனிப்பட்ட நன்றி ;)


ராஜா

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •