ஆசிரியர்:
மைக்கேல் சேயர்ஸ்
ஆல்பர்ட் இ.கான்
புதிய ஜனநாயகம் வெளியீடு
வெளியீடு
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
83, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
அப்பப்பா ! எத்தனை வகை பொய் பிரச்சாரங்கள் !!
முன்னாள் சோசலிச நாடுகள் அப்பட்டமான முதலாளித்துவ நாடுகளாகி பிளவுபட்டு போனதால் , குதூகலத்தில் இருக்கும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் செய்கின்ற பித்தலாட்டப் பிரச்சாரங்கள் தான் எத்தனை வகை !
கம்யூனிசம் மனிதனின் சிந்தனையைச் சிறைப்படுத்துகிறது; மனிதனை நாசப் படுகுழியில் தள்ளுகிறது; ஸ்டாலின் மகா கொடுங்கோலன்; கம்யூனிசம் மரணப் படுக்கையில் வீழ்ந்து விட்டது; முதலாளித்துவமே மனிதகுலத்தின் ஓரே நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிரூபணமாகி விட்டது - இவையே பிரச்சாரங்களின் கருப்பொருளாகும்.
ஆனால் , பேராசையும் கொலைத் தாகமும் போர் வெறியும் பாசிசமும் மனித வாழ்வைச் சூறையாடுவதும், சிந்தனையை சிறை வைக்க அல்ல, சீழ் பிடிக்க வைப்பதும் ஏகாதிவத்திங்கள்தான்; தனியுடைமை சித்தாந்தம்தான். சோசலிசம்தான் மனிதனின் சிந்தனை ஆற்றலையும் உழைப்புத் திறனையும் பன்மடங்கு கட்டவிழ்த்து விடுகிறது; மார்க்சியம்- லெனினியமே அதன் இயங்கு சக்தி என்ற உண்மைகளை இவ்வரிய நூல் தெளிவாக நிரூபிக்கிறது.
உலகத்திற்கு சமாதானத்தையும் ஐனநாயகத்தையும் போதிக்கிற அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் இளம் சோசலிச சோவியத் ஒன்றியத்தை ஒழித்துக் கட்ட என்னென்ன அக்கிரமங்களிலும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன என்பதை அடுக்கடுக்காக அம்ப்லப்படுத்திக் காட்டுகிறது, கிடைத்தற்கரிய இச்சிறிய நூல்.
1 comment:
தோழர் ஸ்டாலின் தவறுகள் செய்தாரா? ஆம் செய்தார். இதனை ஏற்றுக் கொள்ளும் நாம் தவறுகள் நிகழ்ந்த சூழலையும், அந்த நெருக்கடியான தருணத்தில் நாட்டை நிர்வகித்து சென்ற திறமையையும், அந்த அனுபவத்தையும் சேர்த்தே மதிப்பிடுகிறோம்.
அதனால்தான் தோழர் ஸ்டாலினிடமிருந்து நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் நாம் கற்றுக் கொள்கிறோம்.
ஆனால், ஸ்டாலின் பெயரால ஜல்லியடிக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்றுமே அவர் செய்த சாதனைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொன்னதில்லை. நோக்கம் நேர்மையானதாக இல்லாதா பட்சத்தில் இபப்டி அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டியதுதான்.
ஸ்டாலினை வைத்து கம்யுனிஸ்த்தின் மீது சேறடிக்க முற்ப்படும் அடிமை நாய்களுக்கு சரியான ப்திலடி கொடுக்க இந்த புத்தகம் உதவும். அந்த வகையில் மா-லே அரசியலை புரிந்து கொள்ள முற்ப்படும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது
அசுரன்
Post a Comment