பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Tuesday, April 10, 2007

அரசு குறித்து - லெனின் பகுதி II

அரசு எல்லாக் காலங்களிலும் இருந்ததில்லை என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். 'அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே? எவ்வப்போது? சமுதாயத்தில் எங்கே வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசும் தோன்றுகிறது.

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கான முதல் வடிவம்; சமுதாயம் வர்க்கங்களாக , ஆண்டைகள்-அடிமைகள் என்று பிரிக்கிற முதல் வடிவம் தோன்றுவதற்கு முன்பு சந்தைவழிக் குடும்பம் என்றும் கூறுவதுண்டு (கிளான் என்பது குலம், தலைமுறை ஆகியவற்றுக்கு இணங்க மக்கள் கூடி வாழும் முறை). ஆதி மக்கல் இனங்களது வாழ்க்கையின் அந்த ஆதிகாலத்திற்குரிய வெவ்வேறு திட்டமிட்ட அறிகுறிகள் இன்றளவும் தப்பிப் பிழைத்திருக்கின்றன. ஆதிகாலப் பண்பாடு பற்றிய எந்த ஒரு நூலை எடுத்தாலும் , ஆதிகாலக் கம்யூனிசத்தை ஓரளவு ஒத்திருக்கும் காலம் இருந்தது பற்றியும். அடிமைகள் என்று, ஆண்டைகள் என்றும் சமுதாயம் பிரிக்கப் படாத காலம் ஒன்று இருந்தது என்பது பற்றியும் வெவ்வேறு அளவு திட்டமான விளக்கங்களையும், குறிப்புகளையும், நினைவுகளையும் நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள். அக்காலத்தில், அரசு என்படு இருந்ததில்லை. வன்முறைகளைப் பயன்படுத்தும் , வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருந்ததில்லை. அவ்வகை இயந்திரமே அரசு எனப்படும்.

ஆதிகாலச் சமுதாயத்தில், ஒரளவு காட்டுமிராண்டி நிலையை ஒத்த , வளர்ச்சியின் இன்னும் மிகவும் தாழ்ந்த படியிலேயே மக்கள் சிறு, சிறு குலங்களாக வாழ்ந்த காலத்தில் - நாக்ரிகம் படைத்த இன்றைய மனிதச் சமுதாயத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலத்தில், அரசு என்ற ஒன்று இருந்ததற்குரிய அறிகுறிகளே தென்பட்வில்லை. அங்கே வழக்கம் , மரபு இவற்றின் ஆதிக்கத்தையும், குலத் தலைவர்கள் கைத்தாண்ட செல்வாக்கு , மதிப்பு , அதிகாரம் இவற்றையுமே நாம் காண்கிறோம். இந்த அதிகாரம் சில வேளை மகளிருக்கும் அளிக்கப் பெற்றிருந்ததைக் காண்கிறோம்- அன்றைய மகளிர் நிலை இன்றைய மகளிரைப் போல உரிமைகளற்ற ஒடுக்கப்பட்ட நிலை இருந்த்தில்லை.
ஆனால் அந்தக் காலத்தில், மற்றவரை ஆள்வதற்காகவும்,ஆள்வதையே நோக்க மாகக் கொண்டும் ஒரு வகைக் கட்டாயப்படுத்தும் இயந்திரத்தை, அதாவது வன்முறை இயந்திரத்தை முறையாகவும், நிரந்தரமாகவும் கையாளுவதற்காக மக்களிடையே வைக்கப்பட்ட தனி வகையின ஆட்களை நாம் எங்கும் காண்பதில்லை. வன்முறைக்கு மற்றவருடைய சித்ததைப் பணியச் செய்வற்குரிய ஆயுதமேந்திய இராணுவப் பிரிவுகள் ,சிறைச்சாலைகள், வேறு பல சாதனங்கள் முன் சொன்ன இயந்திரங்களின் இன்றைய உருவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசு என்பதன் சாரம் இவை அனைத்திலும் அடங்கியிருக்கிறது. இவற்றை ஆதிகாலக் சமுதாயத்தில் எங்குமே நாம் காண முடிவதில்லை.

முதலாளித்துவ அறிஞர்கள் முன்வைத்துள்ள மதப்போதனைகள் என்று கூறப்படுபவை , உபாயங்கள், தத்துவஞான வாதங்கள்,பல்வேறு கருத்தோட்டங்கள் ஆகியவறறை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, விசயத்தின் உண்மையான சாரத்தை மட்டும் அறிய முயன்றால் , அரசு என்பது மனித்ச் சமுதாயத்தினின்று முழுமையாகப் புறத்தே நிற்கும், ஆளுவத்ற்கான இயந்திரமாக விளங்கிவதை நாம் காண்போம். ஆளுவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஒரு தனிப் பிரிவினர் தோன்றும் பொழுது,பிறருடைய சித்தத்தைக் கட்டாயப்படுத்துவதற்கும், கீழ்ப்படுத்துவதற்குமான தனி இயந்திரம்- சிறைச்சாலைகள், தனிப்பட்ட படைப் பிரிவுகள் , இராணுவக் முதலியவை - அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது , அரசு என்பது தோன்றுகிறது.

என்றாலும், அரசென்பதே இல்லாத காலம் ஒன்றும் இருந்தது. அப்பொழுது, பொதுத் தொடர்புகள், சமுதாயக் கட்டுப்பாடு , வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாம் பழக்க வழக்கம், மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ, குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ, உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப் பெற்றன. மகளிரோ அந்நாளில் ஆடவரோடு சரி நிகரான நிலையைப் பெற்றிருந்ததோடு, பல சமயங்களில் ஆடவரிலும் உயர்ந்த நிலையைக் கூடப்பெற்றிருந்தார்கள். அந்நாளில் ஆளுவதற்கு தனிச்தேர்ச்சி பெற்ற வகையினர் இருந்ததில்லை. எங்கு? எப்பொழுது? சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு பிரிவினர், மற்ற பிரிவினரின் உழைப்பை நிரந்தரமாகத் தன்வயமாகக் கொள்ள முடிகிற, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாளப் பிரிந்ததோ , அங்கு அப்பொழுது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் தனி இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.

சமுதாயம் இவ்வாறு வர்க்கங்களாகப் பிரிந்ததை வரலாற்றின் ஓர் அடிப்படை உண்மையாக எப்போதும் தெளிவாக மனதில் இருத்துதல் வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆடுகளாக விதிவிலக்கில்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மனிதச் சமுதாயங்களின் வளர்ச்சியும் ஒரு பொது விதிக்கு உட்பட்டு , முறையாகவும் , ஒத்தியைந்த வழியிலும் நடந்திருக்கும் எனபதைக் காட்டுகிறது. அவ்வகையில், முதற் கண் சமுதாயம்வர்க்கங்கள் இன்றி இருந்தது. தொடக்கத் காலத்திய தந்தை வழிக் குடும்பம், ஆதிகாலத்திற்குரிய சமுதாயம். அதில் உயர்குடி மக்கள் என்போர் இருந்ததில்லை. பிறகு அடிமை முறையில் அமைந்த சமுதாயத்தை , ஆண்டை - அடிமைச் சமுதாயத்தை நாம் காண்கிறோம். நாகரிகம் படைத்த இன்றைய ஐரோப்பா முழுவதும் இந்தக் கட்டத்தை கடந்து தான் வந்திருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடிமை முறை இங்கு ஆதிக்கம் செலுத்தியது. உலகத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மிகவும் பெருபாலான மக்களினங்கள் இந்தக் கட்டத்தை கடந்து தான் வந்திருக்கின்றன. குறைந்த வளர்ச்சி பெற்ற மக்களினங்களிடையே இன்றளவும் அடிமை முறையின் அடையாளங்கள் நீடித்திருக்கின்றன. இன்றைக்கும், எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவில் , அடிமை முறை ஏற்பாடுகளைக் காணலாம்.

ஆண்டைகளும் - அடிமைகளும் முதன்முதலில் ஏற்பட்ட முக்கிய வர்க்கப் பிரிவுகள் ஆவர். முதலில் கூறப்பட்ட பிரிவினர் (ஆண்டை) நிலமும். கருவிகளும் - அக்கருவிகள் அக்காலத்தில் எவ்வளவுதான் பண்படாத நிலையில் இருந்தாலும் -உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் மட்டுமல்ல, மக்களையுங்கூடத் தம் உடைமையாக்கிக் கொண்டார்கள். இந்த்ப் பிரிவினர் ஆண்டைகள் எனப்பட்டனர். மற்றவுக்காக உழைத்து , உழைப்பை வழங்கியவர்களோ அடிமைகள் எனப்பட்டனர்.

வரலாற்றில் இந்த வடிவத்தைக் தொடர்ந்து இன்னொறு வடிவம் பண்ணையடிமை முறை தோன்றியது. மிகவும் பெரும்பாலான நாடுகளில்,அடிமை முறை தன் வளர்ச்சிப் போக்கில் பண்ணையடிமை முறையாக ஆயிற்று. அப்பொழுது சமுதாயத்தின் அடிப்படைப் பிரிவினை நிலப்பிரபுக்களும், பண்ணையடிமைகளுமாக அமைந்தது. மக்களுக்கிடையே நிலவிய உறவுகளின் வடிவம் மாறலாயிற்று. ஆண்டைகள் அடிமைகளைத் தங்கள் உடைமையாகவே மதித்திருந்தனர். சட்டம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தியதோடு, அடிமையை முழுக்கவும் ஆண்டைக்கே உரிமைப்பட்ட ஒரு பொருளாகக் கருதியது. பண்ணையடிமைக் குடியானவர்களைப் பொறுத்தமட்டில், வர்க்க ஒடுக்கு முறையும், சார்பு நிலையும் தொடர்ந்து இருந்து வந்தன. ஆயினும், குடியானவன் நிலப்பிரபுவின் உடைமையில் உள்ள பொருளாகக் கருதப்படவில்லை. குடியானவனுடைய உழைப்புக்கும், சில குறிப்பான ஊழியங்களைப் புரியும்படி அவனைக் கட்டாயப்படுத்தவும் மட்டும் நிலபிரபு உரிமை கொண்டுருந்தார். ஆனால் நடைமுறையில், குறிப்பாகப் பண்ணையடிமை முறை எல்லா நாடுகளையும் விட நீண்ட காலமாக நிலவி, மிகவும் கொடுமையான வடிவங்களையும் கொண்டுருந்த ரசியாவில், இது அடிமை முறையினின்று எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை என்று உங்களுக்குத் தெரியும்.

இதன்பின், பண்ணையடிமைச் சமுதாயத்தில் வாணிபம் வளர்ச்சியுற்று, உலகச் சந்தை தோன்றி, பணப் புழக்கம் வளர்ச்சியுற்றதோடு கூடவே, ஒரு புதிய வர்க்கம் தோன்றிற்று. அதுதான் முதலாளி வர்க்கம்.

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •