..
அவன் அத்தனை வல்லமை பெற்றவன், அவனால் மலைகளைக் குடைந்து செல்ல முடியும், நடு வானிலேயே அவனால் அருவியைத் தடுத்து நிறுத்த முடியும்.
அவன் பூமியின் தோற்றத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறான். காடுகளை உண்டாக்குகிறான், கடல்களை இணைக்கிறான், பாலைவனங்களுக்கு நீரைக் கொண்டுவருகிறான்.
யார் அந்த வல்லமை மிக்கவன்?
மனிதன்.
பூமியின் வரலாற்றை விஞ்ஞானிகள் ஐந்து யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய யுகமானது கைநஸோயிக் யுகம் - புத்துயிருழி யுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யுகத்தினுடைய ஆயுள்காலம் 65-67 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இதற்கு முந்தியது மெஸஸோயிக் யுகம் (இடையிரூழி யுகம்), பாலியொஸோயிக் யுகம் (தொல்லுயிரூழி யுகம்). மிகவும் பழைய யுகங்கள் புரோதேரஸோயிக் மற்றும் ஆர்கேயிக் யுகங்களாகும். ஆர்கேயிக் யுகத்தின் கடைசியிலிருந்து மிகவும் எளிமையான உயிரினங்கள் தோற்றத்திலிருந்தும் நாம் மூன்று பில்லியன் ஆண்டுகளால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்.
..
ஒவ்வொரு யுகமும் காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. புத்துயிரூழி யுகமானது கீழ்வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது:
- குவாடர்னரி காலம் அல்லது ஆன்த்ரொஜேன். இந்த காலத்தில்தான் மனிதன் தோன்றினான். அந்த நேரத்தில் ஐரோப்பாவிலும் சைபிரியாவிலும் கம்பளியானைகள் இருந்தன;
- டெர்டியரி காலம், அப்போது கம்பளி யானைகளின் 'யுகம்' தொடங்கியது;
- நியோஜேன்;
- பாலியோஜேன்.
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்த்ரொபஜேன் யுகத்தின் தொடக்கத்தில், நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களாலும் நடக்கக் கூடிய ஒரு விசேட வகையான குரங்குகளிலிருந்து பித்தெகாந்த் ரோபஸ் அல்லது குரங்கு மனிதர்கள் என்ற மனிதனுடைய மூதாதையர்கள் தோன்றினார்கள் . அவர்களிலிருந்து வரலாற்றுக்கு முந்திய, பண்டைய மனிதர்கள் (நியாண்டர்தால் மனிதர்கள்), மேலும் நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நவீனகால மனிதர்கள் தோன்றினார்கள்.
நூலில் இருந்து
எம்.இலியீன்,யா.ஸெகால்
ராதுகா பதிப்பகம்
மாஸ்கோ
பக்கங்கள் 256
கிடைக்குமிடம்
பழைய புத்தகக் கடைகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(கொஞ்சம் சிரமம்தான்)
1 comment:
//பழைய புத்தகக் கடைகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(கொஞ்சம் சிரமம்தான்)
//
How many good books we lost like this..... :-((((
Asuran
Post a Comment