1930 ஆம் ஆண்டைய புரட்சியின் எழுச்சி தோன் கிராமங்களிலும், பண்ணைகளிலும் கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. தனியார் நிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் வழியாகக் கூட்டுப்பண்ணையின் ஏர்கள் அகழ்ந்து சென்று, தங்களது வாழ்வைத் திட்டமிட கஸாக்குகளை எதிர்த்து நிற்க வைத்தது.
..
ஷோலகவின் "கன்னி நிலம்" வெறுமனே ஈர்த்துப் பற்றுகின்ற நாவல் அல்ல. அது ருஷ்ய கிராமப் புறங்களில் புரட்சி பொங்கி எழுந்ததைக் கூறும் ஆவணக் குறிப்புமாகக் கருதப்படும்.
ஷோலகவின் "கன்னி நிலம்" வெறுமனே ஈர்த்துப் பற்றுகின்ற நாவல் அல்ல. அது ருஷ்ய கிராமப் புறங்களில் புரட்சி பொங்கி எழுந்ததைக் கூறும் ஆவணக் குறிப்புமாகக் கருதப்படும்.
கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் திருப்புக் கட்டத்தைத் துல்லியமாகக் சித்தரிக்கின்றன, போல்ஷெவிக்குகளான தவீதவ், நகூல்னவ், ரஸ்மியோத்னவ் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளான மய்தானிக்கவ், ஷ்சுக்கார் மற்றும் லூபிஷ்கின் இவர்களது எதிர்த்தரப்பினராகிய குலாக் ஒஸ்த்ரவ்னோவ், சார்ஜென்ட் மேஜர் பொலவ்த்ஸெவ் ஆகியோர் உண்மையான உயிருடன் பாத்திரங்களே ஆவர். இதிலிருந்து கிராமத்தில் இருந்த தொடர்பை நம்மால் உயிருடன் கண்டு கொள்ள முடிகிறது.
கூட்டுப்பண்ணை முறை தொடங்கப் பெற்று ஆரம்ப ஆண்டுகளில் தோன் பகுதியில் தீவிரமாக இருந்த வர்க்கப் போராட்டம், உயிர்த்துடிப்பான உச்சக் கட்டம் இவைகளை நூல் முக்கிய நோக்கங்களாகப் கொண்டும் , எஞ்சிய வர்க்க சக்திகளையும், கட்சியினுடைய வழிகாட்டுதலின் கீழ் தோன் விவசாயிகள் பெற்ற வெற்றியின் மகத்துவத்தையும் சித்தரிக்கிறது.
..
தோன் ஸ்தொப்பியில் தோன்றிய புதிய புரட்சிகர மான கொள்கைகளைக் கொண்ட வாழ்க்கையைப் புரிந்து கொண்டவர்களையும், கூட்டுபண்ணை நிலங்களில் முதலாவது உழுசாலை ஓட்டியவர்களையும், உண்மையா வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட ஷோலகவ் தனது நெஞ்சார ஆதரித்து நிற்கிறார்.
"கன்னி நிலம் "
மிகயீல் ஷோலகவ்
..
இரண்டு பாகங்கள்
..
ராதுகா பதிப்பகம்
மாஸ்கோ
1 comment:
Hi
Now were we can buy this book ? (publication name?)
Post a Comment