பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, August 24, 2007

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே.
..
இத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக தூற்றப்பட்டார். இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருஷேவ் அவரின் வளர்ப்பு நாய்போல குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.

இந்த விஷயத்தை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாக அலசுகிறது. உண்மை நிலை அறியாத இந்திய மக்கள்., குருஷேவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஸ்டாலின் எவ்வாறு அவதூறு செய்யப்பட்டார் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.

ஸ்டாலினை குருஷேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்து கொள்வது இப்போது எளிது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்; குருஷேவ் ஒரு திருத்தல்வாதி; அவர் ஒருபோதும் மார்க்சியவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.

உலக வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியது எது? அவர் சோவியத் யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தது முதற்காரணம். உண்மையில், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் உலகத்துக்கு ஸ்டாலின் அளித்த கொடையாகும். 1929 இல் உலகம் மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்தது. முதலாளித்துவ நாடுகளில் தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இந்த நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் திவாலாயின. இந்தக் காலகட்டங்களில்தான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்தத் திட்டம் உதவாக்கரை என்று கணித்தது.

ஆனால் நான்கரை ஆண்டுகளிலேயே ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதால், உலகமே வியந்து நின்றது.யாரெல்லாம் இந்தத் திட்டம் பற்றி அவதூறு பேசினார்களோ அவர்களெல்லாம் புகழ்த்து பேசவும், எழுதவும் வேண்டியதாயிற்று.

பல வெளிநாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பயணம் செய்தனர். இவர்களில் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவரக்ள் இருந்தனர். " எங்கள் பயணத்தின் போது பிரம்மாண்டமான கட்டுமானங்களைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்" என்று அவர்கள் கூறினர்.

ரவீந்தரநாத் தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய கலாச்சாரத்தை சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி, இதனை5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்று வினவினார். உடனடியாக அந்தக் குழந்தைகள் ஆறுமாதம் ஜெயில் கிடைக்கும் என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது குற்றமாக கருதப்பட்டது. இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.

மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனின் பொதுவான பொருளாதார வளர்ச்சி இருமடங்கு உயர்ந்தது.

நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933

அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9

பிரிட்டன் -----------100 ------- 92.4 ------- 83.8 ------ 83.8 -------- 86.3

ஜெர்மனி -----------100 ------- 88.3 ------- 73.7 ------- 59.8 -------- 66.8

பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4

சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 ---- 201.6

-
(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)

ஸ்டாலின் இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ் அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார்.பல சந்தப்பவாதிகளாலும், ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப் படைக்கப்பட்டது.இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின் சொன்னார்."உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக் காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான், ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்"
(லெனின் - தொகுதி பத்து -பக் 201)

ட்ராட்ஸ்கி தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.

இந்த விசாரனை திட்டமிட்ட நாடகம் எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினர். ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை வேதவாக்கு போல நடத்தி வந்தனர்.

இந்த மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நாம், இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும்.

அவரது மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும். முதலாவது உள்நாட்டு யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். உள்நாட்டு யுத்தத்தின் போது ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால் அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தானில் போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார்.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது. பின்னர் 1941 ஆகஸ்ட் 8இல் அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும் வரலாறு நிரூபித்துவிட்டது.

ஆனால், ஒரு மனிதர் எவ்வாறு இவ்வளவையும் செய்து முடித்தார் என்ற வினாவுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் ஸ்டாலின் ஒரு அடிப்படையான மார்க்சியவாதி, அவரது பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயமல்ல; மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவங்களை அவர் விளக்கினார்; விவரித்தார். இதில் அவர் ஈடு இணையற்ற விளக்கவாதி. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய அவரது கட்டுரை மார்க்சியத்தின் சாரமாகும். இதனையும் ஏங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலையும் படிப்பது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.

ஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர்? "தவறுதல் மனித இயல்பு" ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும் போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் , அவரது மேன்மைகளையும் வரலாற்றுப் பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல. இந்தக் கோணத்திலிருந்து ஸ்டாலின் பற்றிய நிர்ணயிப்பைச் செய்தால், அவரது காலத்தில் இருந்த எவரையும் விட அவர் பிரகாசிப்பார்.

அவரது காலத்தில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், ஹென்றி பார்பஸ், ரோமன் ரோலண்ட் , ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, சிட்னேவெப், எச்.ஹி.வெல்ஸ் ஆகியோரும் மற்றவர்களும் (இவர்களில் சிலர் ஸ்டாலினுக்கு கசப்பான எதிரிகளும் கூட) இந்த நூற்றாண்டின் மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர் எனப் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர்.

அவரது பரம் வைரியான சர்ச்சில் சொன்னார்: " நமது முயற்சிகலுக்கும் உறுதிகளுக்கும் ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள். அந்த வெற்றியாளர்களும் போருக்கு பின் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவர்களின் சாதனைகள் இந்தச் சோதனைகளில் அடித்துச் செல்லப்பட்டன. .,..... ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகின் மூலை முடுக்குகலிலெல்லாம் அது பரவும். நாம் இந்த மாமனிதனுக்கு நெருக்கமாகவும் நண்பனாகவும் இருப்போமானால் இந்த உலக நிகழ்வுகளை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றெ எண்ணுகிறேன்.

இனி என்ன சாதனை ஸ்டாலினுக்கு எஞ்சியிருக்கிறது?

எனது சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். தெலுங்கானாவில் சண்டை நடந்து கொண்டிருந்த பகுதிகளில் நான் கட்சிக் கல்விப் பிரிவில் பணியாற்றினேன். ஒரு சமயம், யுத்த மைத்தில் தகவல் தொடர்பாளர் ஒருவர் தவறு செய்துவிட்டார். இதற்காக அவரின் செயலாளர் அவரை விசாரனைக்கு அழைத்து கண்டிப்புடன் அறிவுரை கூறினார்:

எவ்வளவு பெரிய தப்பு செஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமா? இந்தத் தவறு மையத்துக்கு சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தலாம்; மையத்துக்கு இழப்பு ஏற்பட்டால் தெலுங்கானா போராட்டம் தோல்வி அடையக் கூடும்; தெலுங்கானா போராட்டம் தோல்வியடைந்தால், இந்தியப் புரட்சி தோற்றுப் போகலாம்; இந்தியப் புரட்சி தோற்றுப் போனால் உலகப் புரட்சி தோற்றுப் போகலாம்; உலகப் புரட்சி தோற்று போனால் ஸ்டாலின் தோற்றுப் போவார். தவறு செய்த அந்தத் தோழர் இந்த நீண்ட உரையை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் எந்தவித அசையும் இல்லை. ஆனால் இந்தத் தவறு ஸ்டாலினை பாதித்துவிடும் என்று சொன்னவுடன் தனது தவறை உணர்ந்து வருந்தினார். தொலை தூரத் தெலுங்கானாவில் இருந்த தோழர்களிடம் கூட ஸ்டாலினின் பெயர் இவ்வாறு பெருமதிப்புப் பெற்றிருந்தது.

ஸ்டானினைப் பற்றி எம்.ஆர்.அப்பன்.எழுதிள்ள வரலாற்று நூல் மிகுந்த ஆதாரபூர்வமாகவும் வெளிப்டையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியர்களுக்குத் தெரியாத பல உண்மைகள் இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த நூல் படித்துப் பயணடையத்தக்கது.

மக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கும் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்.

அணிந்துரையில் நந்தூரி பிரசாத ராவ்
..
எம்.ஆர்.அப்பன்
..
வெளியீடு
.
அலைகள் வெளியீட்டகம்
சென்னை- 600 024
..
விலை ரூ 175
பக்கங்கள் 464
..
கிடைக்குமிடம்
.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
.
Related:
..

3 comments:

மாசிலா said...

இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.

ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர.

வேணாம் ஐயா, இதெல்லாத்தையும் மக்கள் இப்ப நம்ப மாட்டாங்க. ஏனய்யா அறியாத மக்கள் மனசுல இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை நட்டுவைக்க முயற்சிக்கிறீங்க. நல்லதில்லைங்க ஐயா.

நன்றி.

புத்தகப் பிரியன் said...

மாசிலா,

தங்களது வருகைக்கு நன்றி

//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.
//

இதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...

தெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //

இது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.

இது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...

"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.

ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.

""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.
"
http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html

மேலும் இது குறித்து விவாதிக்க

தோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ

http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

புத்தகப் பிரியன் said...

மாசிலா,

தங்களது வருகைக்கு நன்றி

//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.
//

இதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...

தெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //

இது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.

இது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...

"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.

ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.

""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.
"
http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html

மேலும் இது குறித்து விவாதிக்க

தோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ

http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •