பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Showing posts with label கலாச்சார ஏடு. Show all posts
Showing posts with label கலாச்சார ஏடு. Show all posts

Friday, July 11, 2008

"புதிய கலாச்சாரம்" ஜூலை 2008



பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!
----------------தலையங்கம்

மகரஜோதி பொய்!
ஐஸ் லிங்கம் பொய்!
பக்திப் பரவசமும் பொய்!
---------------அட்டைப்பட கட்டுரை


'இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணற்திட்டு என்று சொன்னால், இல்லையில்லை, அது ராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். ' அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் 'இல்லையில்லை, அது இயற்கையானது - எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெவீகம்! தெற்கு செயற்கை தெய்வீகம்!

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? 'மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பபன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை 'மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள் என்று மட்டும் நாம் கருதமுடியும் என்ன வகை பகதி இது?

மூட நம்பிக்கை - பகுத்தறிவு, ஏமாற்றுபவன் - ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ¦ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த 'பக்தி' காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்கு பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள் ! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரிந்தறிய முடியவில்லை.

WWF எப்றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள் கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். 'குத்து...கொல்லு' என்று வெறிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் ? நடிகன் யார், ரசிகன் யார் / தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் கொள்ளுபவன் யார் ? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார் கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் 'பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை; லெளகீதத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளில்லும் வேர்பரப்பியிருக்கும் இந்தப் 'பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது 'ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் எனப்படும் எம்.ஆர்.ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்த போது, "குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மது விலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது" என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு "ராமன் என்ன எஞ்சினீயரா?" என்ரு கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

"சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்" என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த 'அட்டைக்கத்திகள்' நிறைந்த இந்தக் காலத்தில் 'ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை' நினைவு கூர்வது, வேறேதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.

பணம் அலுக்கவில்லை - பகட்டு அலுத்துவிட்டது
---------------- குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

சத்யபாமா பல்கலைக்கழகம்:
---------------- பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்:
தொண்டர்களாக குண்டர்கள்!
தலைவர்களாக கிரிமினல்கள்!
---------------- ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப் போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!

அமெரிக்கா:
----------------வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
---------------- திங்கள் சத்யா இனையத்திலிருந்து

காதல் முதல் கருப்பை வரை வாடகைக்கு!
--------------- சேவைத்துறையின் வரம்புகள் எங்கே முடிகின்றன? அவுட்கோர்சிங் என்ற குத்தகை வேலை முறை எந்த எல்லை வரை விரியவிருக்கிறது? அது இன்னும் எத்தனை தூரம் விரிந்தால் இந்தியா வல்லரசு ஆகும்?

சிறுகதை:
நாய்க்கர்

கவிதை :
கல்வி கடவுள் டில்லி பாபு!
கெட்டாலும் மேன்மக்கள்.....

26 வது ஆண்டில் புதிய கலாச்சாரம்

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் :25, 26
குரல் :11-12, 1-2

உள்நாடு : ரூ 10

ஆண்டு சந்தா: ரூ 150

சந்தா படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706
மின் அஞ்சல் முகவரி:
pukatn@gmail.com

Sunday, March 9, 2008

"புதிய கலாச்சாரம்" மார்ச் 2008

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ்:
வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்!
ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!
--------------- தலையங்கம்

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய நமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்கள் மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள்தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச் 2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட முடியும்.

சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமுல்படுத்தக் கோரினால் 'சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற அதைவிடப் பெரிய அரசானை அமலாகிறது! " தமிழ் பாடலாம் " என்று ஆணையிடுகிறது அரசு, "அதை அமல்படுத்த உத்தரவாதம் தரமுடியாது" என்று அந்தக் கோயிலில் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஒ.

நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பலமேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்க முடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையை பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது.

பள்ளி மாணவர் வன்முறை:
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!
---------------- அட்டைப்பட சிறப்புக் கட்டுரை.

மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

"இந்த உலகத்தில் பெரும்பாண்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்" என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய " சரியான அனுகுமுறை, மாறாக " இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம்,. உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி", என்று குழந்தைகளைக் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!

நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவக் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுக் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.

மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால் பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில் தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் 'அன்பு; பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.

அமெரிக்க சிந்துபாத்களும்
பின்லேடன் வேட்டையும்!

ஒசாமா மற்றும் அல்கொய்தா அபாயம் நீடிக்கும் வரைதான், போர்களையும் கொள்ளைகளையும் நீட்டிப்பதற்கான, அமெரிக்க வாக்காளர்களை ஏய்ப்பதற்கான குறைந்தபட்ச அரசியல் நியாயத்தையேனும் அமெரிக்கா தக்க வைத்து கொள்ள முடியும்.

எனவே, பயங்கரவாதப் போரை வர வேண்டுமானால், உலகின் முதல் நிலை பயங்கரவாதியைத் தண்டித்தால்தான் முடியும். அம்முதல் நிலை பயங்கரவாதி இந்துகுஷ் மலையில் அல்ல, புஷ் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் வெளிப்படையாக உலவிக் கொண்டிருக்கிறான்.

தரகு முதலாளிகளின் பிடியில்
தமிழ் சினிமா!

சினிமாவின் உள்ளடக்கமும் வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனி நபர் வாதம் நுகர்வு, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடி நாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, 'நடுத்தர மேட்டுக்குடி, வாழ்வே வாழ்க்கையின் லட்சியம்' என்று போற்றப்படும்.

இளமையின் கீதம்
----- நூல் அறிமுகம்

'புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்ட வேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால் எனது பிரச்சினை தனியானது நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும், மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்யகிறது நாவல்.

அண்ணன் வர்றாரு... வள்ளல் வர்றாரு.... எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த
காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்;
"இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
திடுட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்".

கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
"இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்."

திருக்கடையூர் புராணம் அல்லது 60-வது கண்டம்

அடித்த கொள்ளைக்கும்...
குடித்த இரத்தத்திற்கும்....
அறுபது வயசு பத்தாதாம்,
"ஆயிளைத்தா" என
ஆரிய பூதம் வருகிறது.

செத்துப் பிழைக்கும் தமிழகமே.
அடுத்த குறி உனக்குத்தான்!

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
போர் 25குரல் 9,10
பிப், மார்ச் 2008
உள்நாடு ரூ 5.00
சந்தா, படைப்புகள் அனுப்பவும் தகவல்களுக்கும்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083
தொலைபேசி 044 - 23718706

Sunday, May 13, 2007

" புதிய கலாச்சாரம்" மே 2007

இந்த மாத புதிய கலாச்சாரத்தில்

*********************************************************************

ம.க.இ.க, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு


-மே நாள் முற்றுகை ! ரிலையன்ஸ் வெளியேறு !!


"எங்களுக்கும் இந்த ரிலையன்ஸ் கடைக்கும் இருக்கும் இடைவெளி வெறும் 50 அடி தூரம்தான். சிறு வணிகத்தை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எனும் பேரபாயத்திற்கும் அது குறித்த வணிகர்கள் மற்றும் மக்களின் புரிதலுக்கும் உள்ள இடைவெளிதான் இதனினும் பெரிதாக இருக்கிறது. அந்த இடைவெளியைக் குறைப்பதுதான் தற்போதைய போராட்டத்தின் எமது நோக்கும். ரிலையன்ஸை வீழ்ந்த வேண்டுமென்றால் கோயம்பேடு எழுந்து நிற்க வேண்டும்"



உலகக் கோப்பைக் கிரிக்கெட் சூதாடித் தோற்ற
-பன்னாட்டு நிறுவனங்கள் !

"முன்பு போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க சூதாட்டக்காரர்கள் முயன்றார்கள்; தற்போது அதைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யக்கூடும். ஏனெனில் கிரிக்கெட்டினால் சூதாடிகள் பெறும் இலாபத்தைவிட பன்னாட்டு நிறுவனங்கள் அடையும் இலாபம் பன்மடங்கு அதிகம்"

நிலவும் இந்தியன்:
-வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

"பூமியில் இருக்கும் மரணக்குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம்!"


கூந்தலைத் துறந்த வறுமை !

"மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்துவிட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி விகிதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா ?"

அருந்ததி ராய் நேர்காணல்:
-இது ஒரு முழுநிறை யுத்தம்!

"நமது பொருளாதாரக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேலையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசு தான்!"

"வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியின் மீதும் அரசு முகத்திலறைந் தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லா விதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்."

திரைப்பட விமர்சனம்:
------------------------------------

"வேலை வெட்டிக்குப் போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்ள்தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாய்க் காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையின்றி இரசிக்கும் இரசனைதான் நமக்கு நெருடலைத் தருகிறது."
-
தோகீ

-என் பாடல் துயரமிக்கது!

"உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது- இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்பந்தத்திற்கு சமூகம் விவசாயிகளைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது"
-------------------------------
சந்தா,படைப்புகள் அனுப்பவும், தகவல்களுக்கும்
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
---------------------
Related:
********************
-
-
-
-

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •