வர்க்கங்கள் தோன்றியபின் சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இணக்கம் காண இயலாத படிக்கு மாறியதனால் உருவானதே அரசு. இவ்வர்க்கங்கள், தம்மை இப்போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்க, இம்மோதலை தணித்து வரம்புக்குள் வைக்க வெளித்தோற்றத்திற்கு , சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியே அரசு.
"புரட்டல்வாதிகள் அரசை, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்கும் கருவி என மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். ஆனால், இணக்கம் உருவாகவே முடியாத வர்க்கப்பகைமைதான் ஒடுக்கும் வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக - வர்க்க ஆதிக்கத்துக்காக, அரசு எனும் கருவியை உருவாக்கியது" - மார்க்ஸ் , எங்கெல்ஸ்
வர்க்கங்கள் தோன்றுமுன் சமுதாயம் அனைத்தும் ஆயுதபாணியாய் இருந்தது. வர்க்கம் தோன்றி முரண்பாடுகள் முற்றியதும், தம்மை சமுதாயத்திற்கு மேலானதாய்க் காட்டிக் கொள்ளும் அரசு, எல்லோருக்கும் பொதுவானதாய், ஆயுதமேந்திய படைகளையும்; சிறைச்சாலை உள்பட்ட இன்ன பிற ஒடுக்கும் கருவிகளையும் தன்வசப்படுத்திக் கொண்டது.
..
எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட அரசு, சுரண்டும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து கொண்டு மற்ற வர்க்கத்தை ஒடுக்கி வருகிறது.
.
நிலவும் அரசானது இருக்கும் வரை வர்க்க சுரண்டல் -சிறுபான்மை, பெரும்பான்மையை ஒடுக்குதல் இருக்கும். அரசானது உலர்ந்து உதிராமல் நீடித்து கெட்டிப்பட்டு நிற்கும். இதை பலாத்காரப் புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்து தனது அரசை நிறுவும். அவ்வரசு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தை தன்னுள் செரிக்க இடைவிடாது போராடும்.
நிலவும் அரசானது இருக்கும் வரை வர்க்க சுரண்டல் -சிறுபான்மை, பெரும்பான்மையை ஒடுக்குதல் இருக்கும். அரசானது உலர்ந்து உதிராமல் நீடித்து கெட்டிப்பட்டு நிற்கும். இதை பலாத்காரப் புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்து தனது அரசை நிறுவும். அவ்வரசு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தை தன்னுள் செரிக்க இடைவிடாது போராடும்.
.
சிறுபான்மையை பெரும்பான்மை - பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் மூலம் ஒடுக்கும். வர்க்கப் பகைமை ஒழிக்கப்பட்டு சுரண்டல் இல்லாமல் போகும். சுரண்டும், சுரண்டப்படும் வர்க்கங்கள் மறைவதால் வர்க்க சுரண்டலை ஒடுக்குதலை காக்கும் அரசின் தேவை இல்லாமல் போகும். அரசு உலர்ந்து உதிரும்.
.
இந்நூலில் அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் விளக்கப்பட்டுள்ளது.
.
வி.இ.லெனின்
.
வெளியீடு
வெளியீடு
.
.முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
.முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
Related:
No comments:
Post a Comment